சென்னை, அக். 5- அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் பதிவேடு மற்றும் சிகிச்சை வரலாறுகளை முறையாக பரா மரிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. சுமதி என்பவர் 2018 பிப்ரவரி 5 ஆம்தேதி தேனியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில் பிரசவத்திற்காக அனுமதிக் கப்பட்டார். ஆனால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்து வர், மருத்துவ வசதி இல்லாத தால், தேனி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருக்க வைத்த தாகவும், தாமதத்திற்கு பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும், தாமதமான சிகிச்சை யின் காரணமாக, பிரசவத்தின் போது தனது குழந்தையை இழந்த தாகவும், கர்ப்பப் பையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். சுமதி அளித்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமை கள் ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதல்வர் சார்பில் சுமதி மற்றும் குழந்தை யின் மருத்துவ அறிக்கைகள் தொடர்பான முறையான ஆவ ணங்கள் இந்த ஆணையத்தில் பார்வைக்கு சமர்ப்பிக்க வேண்டும். புகார்தா ரருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். சுகாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு அதிக அளவில் செலவு செய்யும் நிலையில், விதிகளுக்கு முரணாக மருத்து வர்கள் செயல்படுவதாக வேதனை தெரிவித்த கண்ணதா சன், அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் உரிய சிகிச்சை பதிவேடுகளைப் பராமரிக்கவும், தேவைப்படும்போது அளிக்கவும் மருத்துவ கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சை ஆவணங்களை முறையாக பராமரிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மருத்துவ கல்வி இயக்குநர் மூலம் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கண்ணதாசன் உத்தரவிட்டுள் ளார். மேலும், அரசு மருத்துவர்கள் மருத்துவ அலட்சியத்தால் பிரசவ காலத்தில் குழந்தை இழந்த பெண்ணுக்கு தமிழ்நாடு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கண்ணதாசன் உத்தரவிட்டார்.