‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’: ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள்
புதுதில்லி, நவ. 20- ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரி விக்க வேண்டும் என்று குடி யரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரி வித்துள்ளார். இதுதொடர் பாக, தேசிய அளவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தொடர்பு கொண்டு இது குறித்து ஆலோசனைகளை கேட்டுள்ளதாகவும் அனை த்து அரசியல் கட்சிகளும் ஒரு கட்டத்தில் இதற்கு ஆத ரவு அளித்துள்ளன. ஏற்கெ னவே இருந்த பாரம்பரிய மான ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறையை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக அரசுக்கு ஆலோ சனைகளை வழங்குவோம் என்றும் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு
புதுதில்லி, நவ. 20 - சட்ட விரோத பணப் பரி மாற்ற வழக்கில் அமலாக்கத் த்துறையால் கைது செய்யப் பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதி மன்றத்தில் திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “பல்வேறு உடல் உபாதைகளால் செந்தில் பாலாஜி அவதியுற்று வரு கிறார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படா விட்டால் அவருக்கு பக்க வாதம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக மூளை எம்ஆர்ஐ ஸ்கேன் ரிப்போர்ட் தெரிவிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து, செந்தில் பாலாஜி யின் சமீபத்திய மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு 5 ஆயிரம் கனஅடி நீர்வரத்து
தர்மபுரி, நவ. 20 - கர்நாடகா அணை களான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து விநாடிக்கு 3039 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக எல்லை யான பிலிகுண்டுலுவிற்கு ஞாயிறன்று நள்ளிரவு முதல் நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், திங்களன்று காலை நிலவரப்படி ஒகேன க்கல்லுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.
சபரிமலை: கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை
சபரிமலை, நவ. 20 - சபரிமலையில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நேரத்தை 16 மணி நேரமாக அதிகரித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி அதிகாலை 4 மணியில் இருந்து மதியம் 1 மணி வரையிலும், பின்பு மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் மொத்தம் 16 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். ஏற்கெனவே தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டுப்பாடு உள்ளது குறிப்பிடத்தக்கது.