states

தீக்கதிர் விரைவு செய்திகள்

நள்ளிரவில் சண்டிகர் வரை லாரியில் பயணித்த ராகுல்!

ஹரியானா மாநிலம், முர்தால் நகருக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கிருந்து அம்பாலா நக ருக்கு திரும்பும் வழியில், திங்களன்று நள்ளிரவு திடீரென காரை நிறுத்திவிட்டு, விடியும் வரை லாரியில் பயணம் செய்தார். இந்த பயணத்தின்போது லாரி ஓட்டுநர், கிளீனர்களுடன் கலந்துரையாடலையும் ராகுல் காந்தி நடத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை வெளி யிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, “இந்திய சாலைகளில் 90 லட்சம் லாரி ஓட்டுநர்கள் உள்ளனர். அவர்களுக்கென்று பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ராகுல் காந்தி லாரி ஓட்டுநர்களுடைய மனதின் குரலை கேட்கிறார்” என தெரிவித்துள்ளது.

சிசோடியாவிற்கான நீதிமன்றக் காவல் ஜூன் 1 வரை நீட்டிப்பு!

தில்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவை, முதலில் சிபிஐ-யும், பின்னர் அமலாக்கத் துறையும் கைது செய்தன. அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலை யில், அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில், மணீஷ் சிசோடியாவுக்கான நீதிமன்றக் காவலை,  ஜூன் 1-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவின் புதிய சபாநாயகராகிறார் யு.டி. காதர்

கர்நாடகாவின் புதிய சபாநாயகராக யு.டி. காதர் தேர்வுசெய்யப்பட உள்ளார். இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம் கர்நாடக சட்டப்பேரவையின் தலைவராக தேர்வாகும் முதல் இஸ்லாமியர் என்ற பெயரை அவர் பெறுவார். யு.டி. காதர், தட்சிண கன்னடா  மாவட்டம் மங்களூரு தொகுதியில் 2007, 2008, 2013, 2018, 2023 என 5 முறை தொடர்ச்சி யாக வெற்றிபெற்று வருபவர் ஆவார். இதே மங்களூரு தொகுதியில், யு.டி. காதரின் தந்தையான யு.டி. பரித்தும் 4 முறை எம்எல்ஏ-வாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திக்காக ஒன்றிய அரசு வழங்கும் 2 விருதுகள் ரத்து

சிறந்த இந்தி எழுத்தாளர்களுக்காக, “ஷிக்சா புரஸ்கார்” என்ற பெயரில் கடந்த 1992-ஆம்  ஆண்டு முதல் ஒன்றிய அரசு விருதுகளை வழங்கி வருகிறது. இதன்மூலம் ஆண்டொன்றுக்கு  5 பேருக்கு ரூ. 1 லட்சம் விகிதம் பரிசுத்தொகை வழங்கப்படும். அதேபோல், இந்தி பேசாத பகுதி களை சேர்ந்தவர்களை இந்தியில் எழுத ஊக்குவிக்கும் வகையில், ‘ஹிந்திதார் பாஷி ஹிந்தி லேகாக்  புரஸ்கார்’ என்ற பெயரில் ரூ. 50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த இரண்டு விருதுகளையும் ஒன்றிய அரசு தற்போது கைவிட்டுள்ளது.

ரூ.2 ஆயிரம் நோட்டு வாபஸ், மோடியின் தன்னிச்சை முடிவு

“கர்நாடகம் ஒரு முக்கியமான தென் மாநிலம். அங்குள்ள மக்கள் பல்வேறு நம்பிக்கை கொண்ட  பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். கர்நாடகத்தில் அதிகளவில் கோவில்கள் உள்ளன.  மக்கள் தங்கள் நம்பிக்கையையோ, மத விருப்பத்தையோ மறைக்க மாட்டார்கள். இருந்தபோதி லும், கர்நாடக மக்கள் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவை நிராகரித்துள்ளனர். பாஜக அல்லது பிரதமர் மோடி மீது எதிர்மறை உணர்வுகள் வெளிப்படும் போதெல்லாம், அவற்றை நீர்த்து போகச் செய்ய சில அதிரடி முடிவுகள் எடுக்கப்படு கின்றன. அப்படி எடுக்கப்பட்ட முடிவுதான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது ஆகும். பிரதமர் மோடி தன்னிச்சையான முறையில் இந்த முடிவை எடுத்துள்ளார்” என்று சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க பயணத்திலும் ஜனநாயகம் பற்றி ராகுல் பேசுவார்

“புகார் தெரிவிப்பதற்காக (இந்திய அரசு குறித்து), நாங்கள் இங்கு (அமெரிக்கா) வரவில்லை.  இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பகிர்வதே ராகுலின் இந்தப்  பயணத்தின் நோக்கம். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, அங்கு என்ன நடக்கிறது என்பதை யும், உண்மை நிலையையும் உலகத்துக்கு எடுத்துக் கூற காங்கிரஸ் கடமைப்பட்டுள்ளது. உலக  நாடுகள் எங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரவில்லை. பிரச்சனைகளை எதிர்கொள்ள எங்க ளுக்குத் தெரியும். இந்திய வம்சாவளியினர், அமெரிக்க ஊடகங்கள், பல்வேறு அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதும், விவாதிப்பதுமே ராகுலின் இந்தப் பயணத்தின் நோக்கம். உண்மையான ஜனநாயகம், சுதந்திரம், ஒருங்கிணைப்பு, அமைதி, நீதி உள்ளிட்டவை குறித்து ராகுல் தனது கருத்துகளை அமெரிக்காவில் பகிர்ந்து கொள்வார்’ என்று காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுகள் பிரிவுத் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார்.

2023-க்குள் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் வாபஸ்: ஹிமந்தா

“2023-ஆம் ஆண்டு இறுதிக்குள், அசாமில் இருந்து முழுமையாக, ஆயுதப் படை கள் (சிறப்பு அதிகாரம்) சட்டம், திரும்பப் பெறுவதற்கான இலக்கைக் கொண்டு  செயல்பட்டு வருகிறோம். 2023 நவம்பருக்குள் ஒட்டுமொத்த அசாம் மாநிலத்தில் இருந்தும் ஆயுதப்  படைகள் (சிறப்பு அதிகாரம்) சட்டம் நீக்கப்படும். மத்திய ஆயுதக் காவல் படைகளுக்குப் பதிலாக அசாம் காவல் பட்டாலியன் செயல்படுவார்கள். எனினும், சட்டத்தின்படி மத்திய ஆயுதக் காவல் படை களும் இருப்பார்கள். அசாம் போலீஸ் படைக்கு முன்னாள் ராணுவ அதிகாரிகளைக் கொண்டு பயிற்சி அளிப்போம்” என்று அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த அரசு உதவி செய்யும்: அமிதாப் கந்த்

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் ‘ஜி-20’ 3-ஆவது சுற்றுலா பணிக்குழு மாநாடு திங்க ளன்று நடைபெற்றது. இதில், “திரைப்படங்களுக்கான படப்பிடிப்புக்கு காஷ்மீரை விடச் சிறந்த  இடம் இருக்க முடியாது என ஜி-20 மாநாட்டுக்கான இந்தியக்குழு தலைவர் அமிதாப் காந்த் தெரி வித்துள்ளார். “திரைப்படங்கள் எடுப்பதற்கு உதவியாக, அதற்கான வழிகள் மற்றும் படப்பிடிப்புக் கான தளங்கள் ஆகியவற்றை நாங்கள் (மத்திய அரசு) அமைத்து கொடுப்போம். வேறு எந்த பகுதி யில் இருந்தும் காஷ்மீரில் படத்தின் படப்பிடிப்பை மாற்றுவதற்கும் நாங்கள் உதவுவோம்” என்றும்  அமிதாப் கந்த் குறிப்பிட்டுள்ளார்.

அரசு கல்லூரிகளில்  2.99 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை, மே 23- தமிழ்நாட்டில் கலை, அறிவியல்  கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக் கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழ மையுடன் (மே 22) நிறைவடைந்த நிலையில், மொத்தமுள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்களுக்கு, 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 பேர் விண்ண ப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வரு கின்றன. இவற்றில் மாணவர் சேர்க்கை க்கான விண்ணப்பப் பதிவு கடந்த 8ஆம்  தேதி முதல் தொடங்கி திங்கள்கிழமை நிறைவுபெற்றது. இந்த நிலையில், 1 லட்சத்து 15 ஆயிரத்து 752 மாணவர்கள், 1 லட்சத்து 28 ஆயிரத்து 274 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் 78 பேர் என மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

அனைத்து வகை பள்ளிகளிலும்  தமிழ் கட்டாயம்!

சென்னை, மே 23- தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாய பாடமாக இருக்க வேண்டும் என்று தனியார், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் சுற்ற றிக்கை வெளியிட்டுள்ளார். இந்த சுற்றறிக்கையில் தெரிவித்தி ருப்பதாவது: தமிழ்நாட்டிலுள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட அனைத்து வகை யான தனியார் பள்ளிகளிலும் இனி தமிழ் மொழி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும். தகுதியான ஆசிரியர்களை பணியமர்த்தி மாணவர்களுக்கு தமிழ் கற்றுத் தரவேண்டும். 2023 - 2024 கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு வரையும், 2024 - 2025 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு வரை யும் தமிழ் பாடம் கட்டாயமாக்கப்படு கிறது. அடுத்த கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் பொதுத் தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் எழுத  வேண்டும்.

அம்பத்தூரில்  சாக்லேட் ஆலை

சென்னை, மே 23- தமிழ்நாட்டில், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின் நிர்வாகம்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக தினசரி சராசரி 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தப் பால், கொழுப்பு சத்து அடிப்படையில், பல வகைகளில் பிரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றது. இதுதவிர, 220-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அடுத்தகட்டமாக, ஆவின் குடிநீர் நிரப்பிய பாட்டில்களை விற்பனை செய்ய முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட் டுள்ளது. தினசரி ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் பாட்டில்களை தயாரித்து,  விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள் ளது. இந்நிலையில், ஆவினில் சாக்லேட் வகைகள் தயாரிப்பை விரிவு படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அம்பத்தூரில் ஆலை வளாகத்தில் ஒரு சாக்லேட் ஆலைஅமைக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடி மதிப்பில் இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன.