states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் சொற்பொழிவாற்றும் ராகுல் காந்தி

தான் கல்வி பயின்ற, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே சொற்பொழிவு ஆற்றுவதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இம்மாத இறுதியில் பிரிட்டன் செல்கிறார். இதனை ராகுல் காந்தி அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதுடன், கேம்பிரிட்ஜ் வணிகப் பள்ளியும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. “ராகுல் காந்தியை பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவா் கேம்பிரிட்ஜ் எம்பிஏ நிறுவனத்தில் சொற்பொழிவு ஆற்றுவதோடு, பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்திய - சீன உறவுகள், ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நடைபெறும் தனி ஆலோசனை அமர்வுகளிலும் பங்கேற்க உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளது.

பாஜக சூழ்ச்சிக்கு இரையாகாமல் பிரச்சனைகளை பேசுவோம்

“பொதுமக்களின் கவனத்தை அடிப்படை பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப பாஜக முயற்சிக்கிறது. அதில் நாம் ஏமாந்து விடக்கூடாது. எனவே வகுப்புவாத பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும். மதம் ஒரு உணர்வுப்பூர்வமான பிரச்சனை, கட்சித் தலைவர்கள் அதில் தேவையில்லாமல் தலையிடக் கூடாது. ராம் மனோகர் லோகியாவின் கொள்கைகளில் இருந்து உத்வேகம் பெற்று,  ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகியவற்றில் சமாஜ்வாதி கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் மனதில் கொள்ள வேண்டும்”  என்று உ.பி. முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் கூறியுள்ளார்.

இந்துராஷ்டிரா பேசுபவர் இந்தியாவை அழிக்கிறார்

பிபிசி அலுவலகங்களில் மோடி அரசின் வருமான வரித்துறை மேற்கொண்டுள்ள சோதனை குறித்து, ஐக்கிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “மோடி அரசுக்கு எதிராக யாராவது பேசினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதுதான் இதிலிருந்து தெரிய வருவது ஆகும்” என்று கூறியுள்ளார். மேலும், “ஒருவர் இந்தியாவை ‘இந்து-ராஷ்டிரா’வாக ஆக்க விரும்பினால், அவர் இந்தியாவை அழிக்க நினைக்கிறார் என்றுதான் அர்த்தம். தேசத் தந்தை மகாத்மா காந்தி சொன்னதை மட்டுமே நாம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் காந்திஜியின் பாதையில் செல்வோம்” என்றும் நிதிஷ்குமார் குறிப்பிட்டுள்ளார்.

‘பாஜக ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை என கூறமாட்டேன்’

“பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை என்று கூறவில்லை; நிர்வாக அமைப்பிலேயே ஊழல் சேர்ந்து கொண்டுள்ளது” என்று பாஜக பொதுச்செயலாளர், கர்நாடக எம்எல்ஏ-வுமான சி.டி. ரவி பேசியுள்ளார். கர்நாடக பாஜக அரசு, ‘40 சதவிகித கமிஷன் அரசு’ என்று காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டுக்குத்தான் சி.டி. ரவி இவ்வாறு பதிலளித்துள்ளார். எங்கள் அரசு மீது ஊழல் புகார்களை கூறுவதையே காங்கிரஸ் தலைவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஊழல் புகார்களுக்கு ஏதாவது ஆதாரம் இருந்தால், அவர்கள் நீதிமன்றம் செல்லலாம் என்றும் ரவி குறிப்பிட்டுள்ளார்.

நாகாலாந்துக்கான 371ஏ பிரிவையும் பறிக்கக்கூடும்..!

காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கிய 370-ஆவது சட்டப்பிரிவை நீக்கிய பாஜக, இதேபோல நாகாலாந்திற்கு சில சிறப்பு ஏற்பாடுகளை வழங்கும் ‘371ஏ’ பிரிவையும் ரத்து செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று அம்மாநில மக்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எச்சரிக்கை செய்துள்ளார். “பொய்யான வாக்குறுதி அளிப்பவர்களுக்கும், பாதைகள் எதுவும் இல்லாத இரட்டை எஞ்சின் அரசை பற்றி பேசுபவர்களுக்கும் மாநில மக்கள் தங்களின் கதவை மூட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

புல்டோசர் மூலம் அரசை நடத்த விரும்புகிறார் ஆதித்யநாத்!

“உத்தரப் பிரதேசத்தில் புல்டோசர் அரசியல் செய்தவர்கள் தாய் - மகளின் உயிரைப் பறித்துள்ளனர். அவர்கள் புல்டோசர் மூலம் அரசை நடத்த விரும்புகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் அல்ல. இதையெல்லாம் செய்து அரசியல் ரீதியாக எந்த லாபமும் அடைய மாட்டார்கள். 2023 தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடையும்” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசியுள்ளார்.

ஹிட்லரை விட சர்வாதிகாரமாக பாஜக ஆட்சி

“பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் எண்ணத்தோடு பிபிசி அலுவலகத்தில் இத்தகைய சோதனையை ஏவிவிட்டு உள்ளது. இது பத்திரிகை சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது. இது போன்ற செயல் வரக்கூடிய நாட்களில் இந்தியாவில் ஊடகங்களே இல்லாமல் போவதற்கு வழிவகுக்கும். ஏற்கெனவே ஊடகங்கள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது. எந்த ஊடகமும் இது குறித்து இனி வாய் திறக்கப் போவதில்லை. ஊடகங்களின் தலைமை பாஜக அரசால் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.  ஹிட்லர் ஆட்சியை விட பாஜக ஆட்சி சர்வாதிகாரம் வாய்ந்ததாக இருக்கிறது” என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

எம்டிஎஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

தில்லி, பிப்.17- எம்டிஎஸ் (MTS - MultiTasking Examination, 2022) தேர்விற்கு விண்ணப்பிக்கும் காலம் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக (பிப்., 24 வரை) எஸ்எஸ்சி தேர்வாணையம் (Staff Selection commission) அறி வித்துள்ளது. 11 ஆயிரம் காலிப் பணியிடங்கள் கொண்ட  எம்டிஎஸ் தேர்விற்கு விண்ணப்பிக்க வெள்ளியன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இணைய தளம் முடங்கியதால் தேர்வர்கள் அவதிக்கு ஆளாகி விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் கோரியி ருந்தனர்.

விரைவுப் பேருந்துகள் தாம்பரம் வழியாக கோயம்பேடு  செல்ல உத்தரவு

சென்னை,பிப்.17- வெளியூர்களிலிருந்து சென் னைக்கு வரும் விரைவு பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் வழியாக கோயம்பேடு செல்ல வேண்டும் என்று விரைவு அரசுப் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசு விரைவு போக் குவரத்துக் கழகம் பிறப்பித்துள்ள உத்த ரவில்,“விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகள் சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அனைத்து ஊர்களிலிருந்தும் சென்னை வந்த டையும் பேருந்துகளை தாம்பரம் வழி யாக இயக்க வேண்டும். தாம்பரம் மாநகரப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து  தள்ளி இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விட வேண்டும். இதன் மூலம் தாம்பரம், குரோம் பேட்டை, ஆலந்தூர், வடபழனி செல்லும் பயணிகள் பயன் அடைவது டன், நமது கழகத்திற்கு வருவாய் அதி கரிப்பு ஏற்படும். மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக வரும்  பேருந்துகள் மட்டும் மதுரவாயல் வழியாக கோயம்பேடு பேருந்து நிலை யத்திற்கு இயக்க வேண்டும் என்று  கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாடு மீனவர் பலி:  போக்குவரத்து நிறுத்தம்

கிருஷ்ணகிரி,பிப்.17- கர்நாடக மாநிலம் அடிபாலாறு பகுதியில் கடந்த 14 ஆம் தேதி மீன் பிடித்து கொண்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் மீது வனத்துறை யினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராஜா பலியானார்.  அவரது உடல் காவிரி ஆற்றி லிருந்து மீட்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு-கர்நாடக எல்லையான பாலாறு பகுதியில் பெரும் பதற்றம்  ஏற்பட்டுள்ளது. மேலும், சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே உள்ள  பாலாறு சோதனைச்சாவடியில் போக்கு வரத்து முழுவதும் நிறுத்தப்பட் டுள்ளன. 

துணிகளை துவைக்க கைதிகளுக்கு சலவை இயந்திரம் 

சென்னை,பிப்.17- தமிழ்நாட்டில் சிறைகளில் சுகா தாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை யின் ஒருபகுதியாக கைதிகளின் துணி களை துவைக்க சலவை இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள் ளது. சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அவர்களின் துணிகளை அவர்களே துவைக்க வேண்டும். இதில்,  சிலர் துணிகளை சரியாக சலவை செய்து பயன்படுத்துவது இல்லை என்றும், இதனால் சிறைகளில் சுகாதார  சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை தடுக்கும் வகையில் இயந்திரம் மூலம் துணிகளை துவைக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுக்க சிறைத் துறைஅதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி தமிழ்நாட்டிலுள்ள 9 மத்திய சிறை, 5 மகளிர் சிறை, ஒரு  பார்ஸ்டல் பள்ளி ஆகிய 15 சிறைக ளில் ரூ. 60 லட்சம் செலவில் 15 கனரக  தொழில் கூட சலவை இயந்திரம்  பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட் டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி புழல் சிறையில் நடைபெற்றது.

ஐ.ஏ.எஸ்.அதிகாரி கதிரவன்  திடீர் மரணம் : முதல்வர் இரங்கல்

சென்னை,பிப்.17- சேலம் ஏற்காடு மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு டேன்மேக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குநராக பணியாற்றி வந்தவர் கதிரவன். இந்நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்தது. இது தொடர்பாக துறை  ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சேலம் டேன்மேக்  நிறுவனத்தில் மேலாண் இயக்கு நர் பதவிலிருந்து கதிரவன் வேறொரு  துறைக்கு பணி மாற்றம் செய்யப் பட்டார். வெள்ளியன்று (பிப்.17) புதிய பதவியில் பொறுப்பேற்க சென் னைக்கு வந்திருந்தார். அவர் தங்கி  இருந்த இடத்தில் திடீரென  மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.  கதிரவனின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காந்திபுரமாகும். இது  குறித்து தகவல் அறிந்து அவரது  உறவினர்கள் சென்னை வந்தனர்.  சேலம் மாவட்ட ஆவின் பொது மேலாளர், வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குநர்,  மதுரை மாந கராட்சி ஆணையர், கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் பதவி களை வகித்துள்ளார். மறைந்த கதிரவனுக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஐ.ஏ.எஸ் அதிகாரி கதிரவன் மறை வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூட்டில் மீனவர் பலி: சிபிஐ கண்டனம்

சென்னை,பிப்.17- கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர் பலியான சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலச் செயலாளர் இரா.  முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப் பதாவது:-  பாலாறும், காவிரியும் கலக்கும் இடத்தில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வழக்கம் போல மீன் பிடிக்கச் சென்ற  மீனவர்கள் மீது கர்நாடக வனத் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி யதில் கோவிந்தப் பாடியை சேர்ந்த  மீனவர் ராஜா கொல்லப்பட்டார். துப்பாக்கி சூட்டில் மரண மடைந்த ராஜாவின் சடலம் பாலாறு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றது. இந்த சம்பவம் தொடர்பாக தக்க விசாரணை மேற்கொள்ளவும், மீனவர் ராஜா குடும்பத்துக்கு மறு வாழ்வுக்கு இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.

துருக்கி, சிரியா நிலநடுக்கம் 50 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!

அங்காரா/டமாஸ்கஸ், பிப்.17- துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கங்களால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நாடுகள் வெளியிட்டுள்ள அதி காரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, துருக்கியில் 38 ஆயிரத்து 44 பேரும், சிரியா வில் 5 ஆயிரத்து 800 என மொத்தம்  43,844 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவார காலத்தைத் தாண்டியும், இடிபாடுகளுக் கிடையில் உயிர்களைத் தேடும் பணியை மீட்பு வீரர்கள் நிறுத்தவில்லை. 205 மணி  நேரம் கழித்து ஒரு பெண் உயிரோடு மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. துருக்கியில் மட்டும் 2 லட்சத்து 16 ஆயி ரத்து 347 குடும்பங்கள் பல்வேறு நகரங் களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. தங்கள் வீடுகள் முழுமையாக இடிந்த தோடு, பல குடும்பத்தினர் மற்றும் உற வினர்களை நாங்கள் இழந்து விட்டோம். மீண்டும் அந்தப் பகுதிகளுக்கு திரும்ப நாங்கள் விரும்பவில்லை என்று பலரும்  கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களுக் கான இருப்பிடங்களை உறுதி செய்யும் பணி நடந்து வருகிறது. சிரியாவில் நிலநடுக்கங்களின் பாதிப்போடு, அமெரிக்காவின் தடைகளை யும் எதிர்த்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. சில  பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை யும், மீட்பு வீரர்களையும் அமெரிக்க ஆதரவு தீவிரவாதிகள் அனுமதிக்க மறுத்து வருகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் சார்பாக செல்லும்  நிவாரணப் பொருட்களும் தடுத்து நிறுத்தப்படுகின்றன.