புதுதில்லி, பிப்.21- வணிகம் நடத்துவதற்கு ஒரு போதும் தான் எதிரானவன் அல்ல; ஆனால், அதானிக்காக மோடி அரசு செய்த மாய மந்திரங்களையே எதிர்க்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். ஒன்றிய பாஜக அரசின் மந்தி ரத்தாலேயே அதானி பலன் அடைந்த தாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, டுவிட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளி யிட்டுள்ள ராகுல் காந்தி அதில் கூறி யிருப்பதாவது: “பிரதமர் மோடிக்கும், அதா னிக்கும் உள்ள உறவு மற்றும் நாட்டின் செல்வம் எப்படி எல்லாம் கொள்ளை யடிக்கப்பட்டது என்பது பற்றி பேசிய எனது கருத்துகள், உண்மைகள் அனைத்தும் நாடாளுமன்ற பதிவு களில் இருந்து நீக்கப்பட்டன. நான் வணிகங்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் ஒரு தனிநபர் மட்டுமே ஏக போக உரிமையை அனுபவிப்பதை ஏற்க முடியாது. பணக்காரர் பட்டியலில் 602-ஆம் இடத்திலிருந்து 2-ஆம் இடத்திற்கு முன்னேறியது, 4 துறைகளில் இருந்து 14 துறைகளில் தடம் பதித்தது, பூஜ்ஜியத்தில் இருந்து 6 விமான நிலையங்களை கைப் பற்றியது போன்ற மாய மந்திரங் களை எதிர்க்கிறேன். விமான நிலையங்களை நிர்வ கிக்காத, அந்த தொழிலில் அனு பவமே இல்லாத நிறுவனத்திற்கு 6 விமான நிலைய பராமரிப்பு ஒப் பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு நிறுவனத்திற்கு 2-க்கு மேற்பட்ட விமான நிலையங்கள் வழங்கக் கூடாது என்ற விதி இருந்தும் அது வும் மீறப்பட்டுள்ளது. லாபம் தரும் மும்பை விமான நிலையத்தையும் அதானியிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த அனைத்து பிரச்சனைகளை யும்தான், நான் நாடாளுமன்றத்தில் எழுப்பினேன்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.