states

காஷ்மீரில் குண்டுவெடிப்பு நடந்தாலும் ராகுலின் பயணம் தொடரும்!

புதுதில்லி, ஜன.21- காஷ்மீரில் இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்த போதும், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்து உள்ளது.  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கடந்த 2022  செப்டம்பர் 7-ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி யில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரை எனும் ‘இந்திய ஒற்றுமை பயணத்தை’ தொடங்கினார். இந்த நடை  பயணம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா,  மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரி யானா, தில்லி, பஞ்சாப், இமாசல பிரதேசம் வழியாக ஜனவரி 18-ஆம் தேதி ஜம்மு - காஷ்மீருக்குள் நுழைந்  தது. அங்கு கடந்த 2 நாட்களாக ராகுல் அங்கு நடை  பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் சனிக்கிழமை யன்று காலை இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது. இந்த  சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர். இது காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியது. குண்டுவெடிப்பால் ராகு லின் நடைபயணம் நிறுத்தப்படலாம் என்று பேச்சுக் கள் எழுந்தன. ஆனால், காஷ்மீரில் இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது பற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செய லாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, “காஷ்மீர் துணை நிலை ஆளுநரை நான் சந்தித்துப் பேசினேன். காஷ்மீரில் உள்ள எங்களு டைய அனைத்து தலைவர்களும் பாதுகாப்பு அதிகாரி களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்வது  என்பது அவர்களுடைய பொறுப்பு. என்ன நடந்த போதும், இந்திய ஒற்றுமை யாத்திரை தொடர்ந்து நடை பெறும்” என்று தெரிவித்தார்.