தெலுங்கானா மாநி லத்தில் நவம்பர் 30 அன்று சட்ட மன்ற தேர்தல் நடைபெறுகி றது. ஆளும் பிஆர்எஸ், காங் கிரஸ், பாஜக, ஒய்எஸ்ஆர் தெலுங்கானா என 4 முனை போட்டி உருவாகியுள்ளது. இந்நிலையில், ஆந்திரா வில் வலுவாகவும், தெலுங் கானாவில் ஓரளவு வாக்கு வங்கியையும் கொண்டுள்ள தெலுங்கு தேசம் கட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், பிஆர்எஸ் மூத்த தலைவரும், மேடக் தொகுதி எம்.பி.யுமான பிரபா கர் ரெட்டி தௌலதாபாத் பகு தியில் பிரச்சாரம் மேற் கொண்டிருந்தார். அப்பொ ழுது, அடையாளம் தெரி யாத நபர் ஒருவர் கை குலுக் கச் செல்வது போல நெருங் கிச் சென்று மறைத்து வைத்தி ருந்த கத்தியால் பிரபாகர் ரெட்டியை திடீரெனக் குத்தி னார். இதனால் வயிற்றில் காயமடைந்த பிரபாகர் ரெட்டியை உடனடியான அருகில் இருந்தவர்கள் காரில் ஏற்றி மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்கு அனு மதித்தனர். பிரபாகர் ரெட்டியை கத்தியால் குத்திய நபரை பிஆர்எஸ் தொண்டர்கள் சர மாரியாக அடித்தனர். உட னடியாக காவல்துறையினர் விரைந்து வந்து, அந்த நபரை மீட்டு கைது செய்து அழைத் துச் சென்றனர். கத்தியால் குத்தியவர் பெயர் ராஜு என்பதும், அவர் யூடியூப் செய்தியாளர் என் றும், தலித்களுக்கான திட் டத்தில் தனது பெயரை சேர்க்குமாறு ராஜூ கேட்டும், பிரபாகர் ரெட்டி செய்யாத தால் கோபத்தில் இவ்வாறு செய்ததாகவும் குறிப்பிட்டுள் ளார்.