சென்னை,அக்.20- இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப் பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டு இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் இப்கோ-டோக்கியோ புது காப்பீட்டு நிறு வனம் மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படு த்தப்பட்டது. பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சுமார் 40.74 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு 26.06 லட்சம் விவ சாயிகள் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்தனர். சம்பா, நெல், மக்காச்சோளம், வெங்காயம் உள்ளிட்ட பருவ பயிர்களுக்கு காப்பீடு செலுத்தினர். மாநில அரசின் காப்பீடு கட்டண மானியமாக ரூ. 1338.89 கோடி காப்பீட்டு நிறு வனங்களுக்கு வழங்கப்பட்டது. ஒன்றிய அரசும் அதனுடைய பங்களிப்புத் தொகை யையும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளது. பல நூறு கோடி ரூபாய் விவசாயிகள் காப்பீட்டு கட்டணமாக செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் சம்பா நெல் உட்பட பருவ பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 481 கோடி 4,42,734 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதி களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மத்திய குழுவினர் இழப்பீட்டிற்காக ஆய்வு செய்தனர். மத்திய குழு ஆய்வு செய்யும் அளவிற்கு பெரும் பாதிப்பிற்கு உள்ளான கிராமங்களுக்கு கூட பயிர் காப்பீடு இழப்பீடு கிடைக்கவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.
மகசூல் இழப்பு அளவீடுகள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். வேளாண்மை துறை, புள்ளியியல் துறை, காப்பீட்டு நிறுவனம் இணைந்த கணக்கீடுகளின் இறுதியில் காப்பீட்டு நிறு வனம் இழப்பு சதவீதத்தை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டிற்கான தொகை வழங்குகிற போது அறிவிக்கும் நிலை உள்ளது. ஏறத்தாழ 40 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ள நிலையில் வெறும் 4 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீடு என்பதும் விவசாயிகள் மற்றும் மாநில அரசு, ஒன்றிய அரசு சில ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி உள்ள நிலையில் வெறும் 481 கோடி மட்டும் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது அளவீட்டு முறைகளில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பெரும் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு கூட பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. எனவே, மறு ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயி களுக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் அனைத்து பயிர்களுக்கும் மாவட்டங்களுக் கும், காப்பீட்டுத் தொகை முழுமையாக கிடைத்திட தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.