ராஜஸ்தான் மாநிலம் சிகார் என்ற இடத்தில் விடுதியில் தங்கி தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகிவந்த நிதின் (18) என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த ஆண்டு மட்டும் ராஜஸ்தா னில் இதுவரை தனியார் பயிற்சி மையத்தில் படித்துவந்த 27 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. டெங்கு பாதிப்பை கண்ட றிவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பரி சோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் வழங்க அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதா ரத்துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
2024 ஜனவரியில் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு தேர்தல் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தீவிர இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தள் குண்டர்கள் வன்முறை யை ஏற்படுத்தும் நோக்கில் யாத்திரை மேற் கொண்டனர். முன்னெச்சரிக்கையாக ஆயி ரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டதால் வன் முறை தடுக்கப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் பர்வானி மாவட்டத்தில் ஞாயிறன்று டிராக்டர் கவிழ்ந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம டைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில், அவர்களின் நிலை கவ லைக்கிடமாக இருப்பதாகவும், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என மருத்துவமனை வட்டா ரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மணிப்பூரில் நடந்து வரும் கலவரங்களுக்கு மத்தியில், மியான்மரில் இருந்து போதைப் பொருள் கடத்துவதற்கான புதிய பாதையாக அண்டை நாடான மிசோரம் உருவெடுத்துள்ள நிலையில், இதுவரை ரூ.60 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை வங்கிகளில் புதிதாக 12 நிர்வாக இயக்கு நர்களை நியமிக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.