சென்னை, ஏப்.21- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் ஏப்ரல் 21 வியாழனன்று விசாரணை நடத்தி னர். நீலகிரி மாவட்டம், கொநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில் எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட காவல்துறையினர் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ராய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகி யோரை கைது செய்தனர். இவ் வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரி ழந்தார். திமுக ஆட்சியில் மேற்கு மண் டல ஐஜி சுதாகர், கோவைசரக டிஐஜி முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இது வரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலா ஏப்ரல் 21 வியா ழனன்று காலை ஆஜராக வேண்டும் என நீலகிரி காவல்துறை சம்மன் அனுப்பியது. சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலாவின் இல்லத்திற்கு சென்ற மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற் கொண்டனர். இந்த விசாரணையின் போது கோடநாடு பங்களாவில் பணி அமர்த்தப்பட்ட ஊழியர்கள் எத் தனை பேர்? யார் மூலம் வேலை யாட்கள் பணியில் சேர்க்கப்பட்ட னர். பங்களா மேலாளருக்கு என் னென்ன பணிகள் கொடுக்கப் பட்டன? உள்பட பல்வேறு கேள்வி கள் சசிகலாவிடம் கேட்கப்பட்ட தாக கூறப்படுகிறது.