பிரதமர் மோடி அவர்களே நீங்கள் மிக உயர்ந்தவர். சர்வ வல்லமை படைத்தவர். எல்லாம் அறிந்தவர், எங்கும் நிறைந்தவர். ஆனால் உங்கள் சொந்த அரசாங்கம் (கர்நாடக பாஜக அரசு) “40% கமிஷன் அரசாக” மாறி மக்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் கேள்வி எழுப்பி யுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொலை செய்ய மாஸ்கோவின் கிரெம்ளின் மாளிகைக்கு அருகே ஆளில்லா ட்ரோன் தாக்குதலை உக்ரைன் நாடு நடத்தியதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை பரபரப்புக் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது.
வளைகுடா கடல் பகுதியில் ஒரு வாரத்தில் இரண்டாவது எண்ணெய்க் கப்பலை ஈரான் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரி வித்துள்ளது. பனாமா கொடியுடன் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற எண்ணெய் கப்பலான “நியோவி”யை ஈரான் கடற்படை சிறைபிடித்துள் ளது. இதற்கு முன் ஓமன் வளைகுடாவில் “அட்வான் டேஜ் ஸ்வீட்” எனப்படும் மார்ஷல் தீவுகளின் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியது.
வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக அழகர்கோவிலில் இருந்து மதுரை நகருக்கு தங்கப்பல்லக்கில் புதனன்று மாலை கள்ளழகர் புறப்பட்டார். மே 5 அன்று அதிகாலை மதுரை கோரிப் பாளையம் பகுதி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வுக்காக 3 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செர்பியாவின் பெல்கிரேடு நகரின் ஒரு பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
பிரேசிலில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக போலி தரவுகளை அரசின் தரவுதளத்தில் சேர்த்த குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சானரோ வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த வழக்கில் பொல்சான ரோவிற்கு நெருக்கமான இருவரை அந்நாட்டு போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.
திருநெல்வேலி ரெட்டியார்பட்டி பகுதியில் ஸ்ரீநகர் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள இரட்டை மலையில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
கென்யாவில் மீண்டும் அரசுக்கு எதிரான போராட் டம் தொடங்கிய நிலையில், போராட்டத்தில் ஈடு படும் மக்களை கலைக்க அந்நாட்டு காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தனிப்பட்ட தாக்குதலையும் அரங்கேற்றி வருகிறது.
திவால் நடவடிக்கைகளுக்காக கோ பர்ஸ்ட் (GO FIRST) நிறுவனம் விமான சேவையை ரத்து செய்வது ஏர்லைன்ஸ் துறைக்கு மோசமானது என்று இந்திய டிராவல் ஏஜெண்ட்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா (TAAI) தலைவர் ஜோதி மயால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோடை மழை கடந்த ஒருவார காலமாக தமிழ் நாட்டை குளிர்வித்த நிலையில், வியாழனன்று (மே 4) முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குவ தாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து ள்ளது. இந்நிலையில் அக்னி நட்சத்திரத்தால் மே 5 முதல் மே 7 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இனிவரும் நாள்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் மக்கள் தேவை யின்றி வெளியில் வருவதைத் தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி யுள்ளது.
கேரளத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பத்தினம் திட்டா மாவட்டத்திலுள்ள திருவல்லா, மலப்புரம் மாவட்டத்திலுள்ள திரூர் ஆகிய பகுதிகளில் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
உலகச் செய்திகள்
ஏற்கனவே நல்ல முறையில் இருக்கும் ஈரான் மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான உறவோடு, வர்த்தகத்தை மேலும் பெருக்கும் ஆலோசனைகளை முன்வைத்திருக்கிறார்கள். மேம்பட்ட பொருளாதார உறவுகளை நட்பு நாடுகளோடு வளர்க்கும் பிரேசில் ஜனாதிபதி லூலாவின் செயல்பாடுகளால் ஈரானுடனான உறவு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஈரானில் இருந்து அதிக அளவில் யூரியா வை இறக்குமதி செய்யும் நாடுகளில் பிரேசிலும் ஒன்றாகும்.
படை வீரர்களைத் தக்க வைத்துக் கொள்வதில் ஆஸ்திரேலியா மும்முரமாக இருக்கிறது. அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மூன்று ஆண்டுகள் கட்டாய ராணுவப் பணிக்குப் பிறகும் சீருடை அணிந்து தொடர்ந்து பணியாற்ற விரும்புபவர் களுக்கு 33 ஆயிரத்து 165 அமெரிக்க டாலர் போனசாகக் கிடைக்கும் என்று ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது. நமக்குத் தேவையான அளவிற்கு ராணுவ வீரர்களை நாம் எடுத்துக் கொள்கிறோமா, இல்லையா என்பது முக்கியான கேள்வி என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ரிச்சர்டு மார்லஸ் தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான பராகுவேயில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆளுங்கட்சியின் வேட்பாளரும், வலதுசாரியுமான சாண்டியாகோ பெனா வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் இடதுசாரி வேட்பாளரான எப்ரெய்ன் அலிக்ரேயும் மூன்றாவது இடத்தில் பராகுயோ கியூபாஸ் ஆகியோர் இருந்தனர். வெனிசுலாவுடனான உறவு மீண்டும் புதுப்பிக்கப் போவதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பெனா கூறியுள்ளார்.