states

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு

சிவகங்கை,ஜன.12- பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த தமிழக அரசு, தற்போது புதிய ஒருங்கிணைந்த ஓய்வூ தியத் திட்டத்தை செயல்படுத்த குழு அமைப்பதாக அறிவித்துள்ளதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடுமையாக எதிர்த்துள்ளது.  சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் ஜனவரி 12 அன்று  கூட்ட ணியின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ச.மயில் மற்றும் பலர் பங் கேற்றனர். இக்கூட்டத்தில், தேர்தல் வாக்கு றுதியில் கூறியபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும்.  இடைநிலை ஆசிரி யர்களுக்கு ஒன்றிய அரசு ஆசிரியர்க ளுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.  தொடக்கக்கல்வி ஆசிரி யர்களின் பதவி உயர்வு வாய்ப்புகளை பாதிக்கும் அரசாணை 243-ஐ ரத்து  செய்ய வேண்டும் என்று வலியுறுத் தப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி  பிப்ரவரி 22 அன்று சென்னை யில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பு சார்பில் பத்தாயிரம் ஆசிரியர் கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டமும், மார்ச் 7-ஆம் தேதி டிட்டோஜாக் சார்பில் கோட்டை முற்று கைப் போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.