states

தமிழ்வழி கற்றோருக்கு மருத்துவர் பணியில் முன்னுரிமை!

சென்னை, ஆக.5- தமிழ்வழியில் கற்றோருக்கு மருத்து வர் பணியில் முன்னுரிமை வழங்க தமிழக  அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத் துள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் மருத்துவர் பணியிடங்க ளில், தமிழ்வழியில் கற்றோருக்கு முன்னு ரிமை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை யை ஒரு மாத காலத்திற்குள் பரிசீலிக்க  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது வரவேற்கத்தக்கது. இந்த கோரிக்கை யை தமிழ்நாடு அரசு ஏற்று செயல்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்து கிறது. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மருத்துவப்  பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கான அறி விப்புகளில் தமிழ் வழியில் கற்றோருக்கான முன்னுரிமை இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசுப் பணிகளில் நிய மனம் மேற்கொள்ளும்போது, தமிழ் வழி யில் கற்றோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு  உள்ளது. அந்த ஒதுக்கீட்டை மருத்துவர் நியமனத்திலும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில்  முன்வைக்கப்பட்டது. அந்த மனுவில், பள்ளிப் படிப்பு வரை தமிழ் வழியில் படித்த வர்கள், மருத்துவக் கல்வி தமிழில் இல்லாத  காரணத்தினால் ஆங்கிலத்தில் படிக்க  நேர்கிறது. ஆங்கிலத்தில் மட்டுமே நடத் தப்படும் படிப்புகளை கல்வித்தகுதியாக கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரி,  மருந்தாளுனர், இளநிலை பகுப்பாய்வா ளர் பணியிடங்களுக்கு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளது  என்பதை குறிப்பிட்டிருந்தனர். இதை விசா ரித்த நீதிபதிகள், இந்த கோரிக்கையை தமிழ்  நாடு அரசாங்கம் ஒரு மாத காலத்தில் பரி சீலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். தமிழ்வழியில் படித்தவர்களின் கோரிக்  கையை ஏற்று, மருத்துவப் பணிக்கான நிய மனத்திலும் 20 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற உத்தரவிட வேண்டுமென தமிழ்  நாடு அரசை மார்க்சிஸ்ட் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வலியுறுத்தி  கேட்டுக்கொள்கிறது என்று அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.