states

கேரளத்தில் தொடரும் கனமழை

பாலக்காடு, நவ. 23 - கேரளத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், தேவை யான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை அரசு எடுத்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்ப தாவது: கேரளத்தின் பல பகுதிகளில் புத னன்று இரவு கனமழை பெய்தது. வியாழ னன்றும், வெள்ளியன்று பிற்பகலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக்கடலில் குறைந்த காற்ற ழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ள தால் மழை தொடரும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.  திருவனந்தபுரத்தில் தாழ்வான பகுதிகள் கடினமானவை. திருவனந்த புரம் மற்றும் பத்தனம்திட்டாவில் தலா ஒரு முகாம் திறக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரி க்கையாக கொல்லத்தில் 38 பேர் பாதுகாப் பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். முகாம்களை திறக்க வேண்டிய சூழ்நிலை  ஏற்பட்டால், அந்த இடங்களை முன் கூட்டியே தீர்மானிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. மாவட்ட அவசர சிகிச்சை மையங்கள் தவிர, தாலுகா அவசர இயக்க மையங்களும் செயல்பட முன்மொழியப்பட்டுள்ளது. சபரிமலை யாத்திரை தொய்வின்றி நடைபெற்று வருகிறது. சபரிமலைக்கு செல்லும் வழியாக உள்ள 4 மாவட்டங்க ளில் சிறப்பு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 135 அடியாக உயர்ந்துள்ளது. ஆபத்து இல்லை. திருவனந்தபுரம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் உள்ள சிறிய அணைகளை திறக்க வேண்டியதாயிற்று. வியாழனன்று காலை வருவாய்த்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் நிலைமை மதிப்பீடு செய்யப்பட்டது. இவ்வாறு பினராயி விஜயன் தெரி வித்துள்ளார்.