states

ரூ.10,790 கோடியில் மின் விநியோக கட்டமைப்பு

சென்னை, மே 18- தமிழகத்தில் சீரான மின் விநியோகம் செய்வதற்காக ஒன்றிய அரசு உதவியுடன் ரூ.10,790 கோடியில் மின்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதுதொடர்பாக மின் வாரிய அதிகாரிகள்  கூறியிருப்பதாவது:- ஒன்றிய அரசு தொடங்கியுள்ள மறு சீரமைக்கப்பட்ட மின் திட்டத்தின்படி, நாடு  முழுவதும் சீரான முறையில் மின் விநியோ கம் செய்வதுடன், மின்சாரத்தை கொண்டு செல்லும்போது ஏற்படும் மின் இழப்பைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ரூ.10,790 கோடி மதிப்பில் மின் விநியோக கட்டமைப்பு களை மேம்படுத்த தமிழக மின் வாரியத்  துக்கு, ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கி யுள்ளது.

இதில், ரூ.8,600 கோடி ஒன்றிய அரசு சார்பில் கடனாக வழங்கப்படும். மேலும், இந்தப் பணிகளை 5 ஆண்டுகளுக்குள் முடித்து விட்டால், ஒன்றிய அரசு வழங்கும் கடன் தொகையில் 60 விழுக்காடு மானி யமாக வழங்கப்படும். மீதியை மட்டும் செலுத்தினால் போதுமானது. மறு சீரமைக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ்,  தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள மின்வழித் தடங்களில் மீட்டர் பொருத்துவது, புதிதாக மின்வழித் தடங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.  ஒவ்வொரு ஆண்டுக்கும் இலக்கு நிர்ணயித்து, பணிகள் மேற்கொள்ளப்படும். நடப்பாண்டில் மின்தேவை அதிகரித்து  வரும் இடங்களில் 26,300 டிரான்ஸ் ஃபார்மர்கள் பொருத்தப்பட உள்ளன. அத்து டன், மின்வழித் தடங்களும் அமைக்கப் படும். இந்தப் பணிகளை ரூ.2,050 கோடியில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்காக திட்ட அறிக்கை தயாரிக் கப்பட உள்ளது. அதன் பின்னர் டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.