states

img

நூறுநாள் சம்பள பாக்கியைக் கேட்டு பூதலூரில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

தஞ்சாவூர், நவ.4-  நூறுநாள் வேலையில் 3 மாத சம்பள  பாக்கியை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், ஏழை-எளிய மக்களை வாட்டி வதைக்காமல், தீபா வளி பண்டிகைக்கு முன்னதாக சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டம், பூத லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில்,  கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடை பெற்றது.  சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.சரவணன், எஸ்.தமிழ்ச்செல்வி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், நூறுநாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, பூதலூர் நான்கு ரோட்டில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில், கோரிக்கைகளை விளக்கி மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்டோர் பேசினர். பின்னர் ஊர்வ லமாகச் சென்று வட்டார வளர்ச்சி அலு வலகம் முன்பு, கஞ்சி காய்ச்சி போராட் டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து, வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் போராட்டம் நடத்தியவர் களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் கூலியை வழங்குவ தாக உறுதியளித்தனர். இதனால்  சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற போராட் டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.