states

img

மனுதர்ம தீண்டாமையை உறுதி செய்த ஆளுநர் ரவி - கி.வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்

நந்தனார் குருபூஜை என்ற பெய ரில் அவர் பிறந்த ஆதனூரில்  நடந்த விழாவில், ஒடுக்கப்பட்ட மக்களில் சிலருக்குப் பூணூல் அணி வித்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதாவது பூணூல் அணியாதவர்கள் எல்லாம் கீழ் மக்கள் என்றும், பூணூல் அணிந்தவர்கள் மட்டுமே மேல்  மக்கள் என்றும் சொல்லும் மனுதர்மத்தின் பேதத்தினை மீண்டும் ஒரு முறை உறுதிசெய்திருக்கிறார். அவர் பூணூல் அணிவித்ததாகச் சொல்லப்படும் அந்த இளைஞர்கள் இத்தனைக் காலம் மனுதருமப்படி இழிவு செய்யப்பட்டிருப்பவர்கள் என்பதைத் தானே அவர் ஒப்புக் கொள்கிறார்! இது பூணூல் அணியாத மக்கள் அனைவரையும் கேவலப்படுத்தும் செயல் அல்லவா? பூணூல் அணிவதன் மூலம் மேல்நிலை யாக்கம் செய்ய முடியும் என்று அனைவருக்கும்  பூணூல் அணிவித்துப் பார்ப்பனர் ஆக்கு கின்றாரா? தமிழ்நாடு பார்ப்பனர் சங்கம் இதை  தீர்மானம் போட்டு வரவேற்குமா?

அந்த இளை ஞர்களைப் பார்ப்பனர்கள் என்று ஏற்குமா? அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று முறையாக ஆகமம், மந்திரங்கள் படித்து அர்ச்சகராகும் முயற்சிக்கும் தடையாக நிற்கும் பார்ப்பனியம் இந்த பம்மாத்து வேலைக்கு என்ன சொல்லப் போகிறது? முன்பு ஒரு முறை ‘துக்ளக்‘ பேட்டிக்காக, அதன் ஆசிரியர் சோ அவர்கள் என்னி டம் இதே கேள்வியைக் கேட்டபோது, நான் சொன்ன பதிலையே இப்போதும் நினைவூட்டுவது சரியாக இருக்கும். “அனைவரையும் சமமாக்க வேண்டு மென்றால் 3 சதவீதம் பேர் தாங்கள்  அணிந்திருக்கும் பூணூலைக் கழட்டுவது எளிதா? 97 சதவீதம் பேருக்கு அணிவிப்பது எளிதா? எது அறிவுடைய செயல்?” ஒடுக்கப்பட்ட சமூக ஆண்களை மேல்நிலையாக்கம் செய்ய பூணூல் அணிவித்த ஆளுநர், அந்த சமூகத்துப் பெண்களை மேல்நிலையாக்கம் செய்ய என்ன செய்வார்? நந்தனார் கதையே தீண்டாமைக் கொடுமை யைச் சொல்வதுதானே! கோயிலுக்குள் செல்ல முயன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தவரான நந்தனாரைத் தீயிட்டுப் பொசுக்கிய கதை தானே! அங்கே சென்று மீண்டும் தீண்டாமையை உறுதி செய்துவிட்டு வந்திருக்கிறாரா பீகார் பார்ப்பனர்? பூணூல் அணியாதவர்களை, பார்ப்பனரல்லா தாரை, ஒடுக்கப்பட்ட மக்களை, சூத்திரர் - பஞ்சமர் என்று பிறவியினால் இழிவுபடுத்தும் மனுதர்மத் தீண்டாமைத் தத்துவத்தை அவர் உறுதிசெய்து வெகுமக்களை இழிவுபடுத்தி யிருக்கிறார்.  ஆளுநரின் செயல் கடுமையான கண்டனத் திற்குரியது.