சென்னை, ஜூன் 1- சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில், அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன் 2-ஆவது நாள் முகாமில், சி. பொன்னையன் பங்கேற்று உரையாற்றி யுள்ளார். அப்போதுதான் பாஜக குறித்து, அதிமுகவினரி டம் எச்சரிக்கை செய்துள்ளார். “பாஜக - அதிமுகவின் கூட்டணிக் கட்சிதான் என்றாலும், கட்சி தமிழகத்தில் வளர்வது அதிமுகவுக்கு - திராவிட கொள்கைகளுக்கு- தமிழக நலனுக்கு நல்லதல்ல. பாஜக வைப் பொறுத்தவரை தமிழக நலனுக்கு எதுவும் குரல் கொடுப்பது இல்லை. காவிரி நதிநீர் விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடக் கூடியது. பாஜக-வால் தமிழ்நாட் டுக்கு எந்த பலனுமே இல்லை. தமிழ்நாட்டில் அதிமுக வின் இடத்தில் பாஜக இருப்பதாக நம்ப வைக்கப்பட்டு வருகிறது. இப்படியான முயற்சி அதிமுகவின் எதிர்காலத் துக்கு நல்லது அல்ல. அதிமுகவை அழித்துவிட்டு அந்த இடத்தில் பாஜக உட்காரப் பார்க்கிறது. திமுகவிற்கு அடுத்த பெரிய கட்சி, எதிர்க்கட்சி பாஜகதான், என்பது போன்ற பிம்பத்தை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பு கின்றனர். அந்த கட்சி நம்முடைய கூட்டணியில் இருக்கிறது என்பதால் இதனை பகிரங்கமாக பொதுவெளியில் பேசக் கூடிய சூழ்நிலை இல்லை. ஆனால் அதன் பிரச்சாரத்தை முறி யடித்து, அதிமுக தான் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என்பதை அதிமுக-வின் தகவல் தொழில்நுட்ப அணி யினர் நிரூபணம் செய்ய வேண்டும். பாஜக-வின் உண்மை முகத்தை சமூக வலைதளங்களில் அதிமுக-வினர் அம்ப லப்படுத்தி பிரச்சாரம் செய்ய வேண்டும். அதுதான் அதிமுக வின் எதிர்காலத்துக்கு நல்லது” என்று பொன்னையன் கூறியுள்ளார்.