states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பாஜக தலைவர் மீது போக்சோ வழக்கு

உ.பி.யில் தலித் சிறுமியிடம் பாலியல் வல்லுறவு

உ.பி.யில் தலித் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து, தடுக்க முயன்ற அவரது தந்தையை கொலை செய்த பாஜக சிறுபான்மை மோர்ச்சா தலைவர் மசூம் ராசா ராஹா மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாயாரின் இறப்பைத் தொடர்ந்து, 17  வயது சிறுமியுடன், அவரது தந்தை, மூன்று  சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் ராஹா வின் வீட்டில் வாடகைக்கு வந்துள்ளனர். சிறுமி வல்லுறவு செய்யப்படுவதை தடுக்க  வந்த தந்தையை ராஹா அடித்து உதைத்  துள்ளார். காயமடைந்த தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் புகாரின் அடிப்படையில் இந்த வழக்கை சாதத் கோட்வாலி போலீ சார் பதிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 28ஆம்  தேதி நடந்த சம்பவத்தில் போக்சோ தவிர,  பாலியல் வல்லுறவு, கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் பட்டியலின மாணவர்களுக்கு 5000 படிப்பு அறைகள்

கேரளத்தில் இந்த ஆண்டு  பட்டியலின மாணவர் களுக்காக 5000 படிப்பு அறைகள் கட்டப்படும் என்று அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அரசு உதவி பெறும் சிறப்பு, தொழில்நுட்பம் மற்றும் மத்தியப் பள்ளிகளில் 5 முதல்  12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு படிப்பு அறை கள் கட்டப்பட்டுள்ளன. முன்பெல் லாம், 8ம் வகுப்பு முதல் படிக்  கும் மாணவர்களுக்கு மட்டுமே படிக்கும் அறை வசதி இருந்தது.  படிப்பு அறை திட்டம் விரிவு படுத்தப்பட்ட பிறகு கிடைத்துள்ள  முதல் வாய்ப்பு இதுவாகும். 5 ஆம் வகுப்பு முதல் கேந்தி ரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் விண் ணப்பிக்கலாம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். ரூ.1 லட்சம் வரை குடும்ப வருமானம் உள்ள  மாணவர்களுக்கும், 800 சதுர அடிக்கும் குறைவான வீடுகளில் வசிக்கும் மாணவர்களுக்கும் படிக்கும் அறை கட்டித் தரப்படு கின்றன. மாநில அரசால் கட்டித் தரப்  படும் வகுப்பறைகளுக்கு மாண வர்கள் செப்டம்பர் 30 வரை விண்  ணப்பிக்கலாம். கிராமசபை பட்டி யலில் பெயர் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப் பங்களை சம்பந்தப்பட்ட வட்டார, நகராட்சி மற்றும் மாநகராட்சி பட்டியல் சாதி மேம்பாட்டு துறை அலுவலகங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவம்  மற்றும் கூடுதல் தகவல்கள் அலு வலகத்தில் கிடைக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரதேச அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காதலர்கள் என நினைத்து  சகோதர, சகோதரியை தாக்கிய பஜ்ரங் தள்

பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்  தின் சத்தர்பூர் மாவட்டத்தில் சடாய் மார்க்க சாலையில்  அமைந்துள்ள ஒரு கோவில் அருகே தெரு வோர கடையில் அதுல் சவுத்ரி மற்றும் அவருடைய சகோதரி முஸ்கான் இரு வரும் நின்றுள்ளனர். இருசக்கர வாக னத்தில் வந்த 3 பேர் இருவரின் பெயரை யும் கேட்ட பின்பு “கோவிலில் காதல் கேட்கிறதா?” என்று கூறி பெல்ட்டால் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாங்கள் சகோ தர, சகோதரி என்று எவ்வளவோ கூறி யும் அக்கும்பல் விடவில்லை. இந்த தாக்கு தலில் அதுல் சவுத்ரிக்கு நெஞ்சு பகுதி யில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்து வமனை சிகிச்சைக்கு பிறகு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்த னர். போலீசார் விசாரணையில் தாக்குத லில் ஈடுபட்ட நபர்கள் பஜ்ரங் தளம் என்ற  இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் என  தெரியவந்துள்ளது. இதுபற்றிய வீடியோ  ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலா கும் நிலையில், சகோதரர், சகோதரிகளுக்  கான ரக்சா பந்தன் பண்டிகையின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறுவை சாகுபடி பாதிப்பு: இன்று முதலமைச்சர் ஆலோசனை

சென்னை, செப்.6- காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப் பட்டது. குறிப்பிட்ட தேதியில் தண்ணீர்  திறக்கப்பட்டாலும் போதுமான தண்ணீர் வரத்து இன்றி விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பயிர்கள் கருகத் தொடங்கின. நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு  சுமார் 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி  நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், பெருமளவிலான விவசாயி கள் ஆற்று பாசனத்தை மட்டுமே நம்பி  சாகுபடி செய்திருந்தனர். ஆனால் காவிரியில் இருந்து போதிய தண்ணீர் வராததால் பாசன நீர்  கிடைக்காமல் பல இடங்களில் சாகுபடி  செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகின. இந்நிலையில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் நிவாரணம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வியாழனன்று (செப்.7) ஆலோசனை நடத்துகிறார். மேலும், டெல்டா மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். போதிய நீர் கடைமடை வரை சென்றடையாத தால் குறுவை சாகு படி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்  விவசாயிகள் கவலை அடைந்துள்ள னர்.

வெடிகுண்டு வீசி  ரவுடி கொலை

திருபெரும்புதூர், செப்.6- திருவள்ளூர் மாவட்டம், திரும ழிசை பகுதியை சேர்ந்தவர் எபினேசர்  (32) ரவுடி. இவர் மீது கொலை, மிரட்டல்,  அடிதடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. எபினேசர் திருபெரும்புதூர்  அருகே மண்ணூர் என்ற இடத்தில் ஆட்டோவில் வந்து கொண்டு இருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் திடீரென ஆட்டோ மீது  காரை மோதினர். மேலும் 2 நாட்டுவெடி  குண்டுகளையும் ஆட்டோ மீது வீசினர். அப்போது, ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பி ஓட்டம்  பிடித்தார். அருகில் உள்ள வயல்வெளியில் ஓடிய எபினே சரை மர்மகும்பல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்தது. இதற்கிடையே எபினேசர் வந்த  ஆட்டோவை ஓட்டி வந்தவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

வரைபட அனுமதி இல்லாத பகுதியில் திட்டங்கள் ரத்து

சென்னை,செப்.6- அரசின் அனுமதி பெறாமல் வீடு  மனை அமைக்கப்பட்டுள்ள பகுதியில்  சாலை அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது. முறையான அனுமதி பெறாத வீட்டுமனை பகுதி களில் அரசின் நிதிகள் செலவிட படமாட்டாது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசின் முறையான வரைபட அனுமதி பெறாத  வீட்டு மனை பகுதிக்கு நிதி ஒதுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கில் அரசு ஒரு திட்டத்துக்கு நிதி  ஒதுக்கும் போது அதற்கான வழிமுறை களை வகுத்துள்ளது உயர்நீதிமன்றம். விதிமுறைகளை மீறும் அதிகாரிகள் மீது அரசின் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் பெயரை மாற்ற முயற்சி: வைகோ கண்டனம்

சென்னை,செப்.6- இந்தியாவின் பெயர் ‘பாரத்’ என மாற்றப்படும் முயற்சிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்  தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய  தேதிகளில் தில்லியில் நடைபெற உள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள்  வரை பலரும் பங்கேற்க இருக்கிறார்கள். உச்சி மாநாடு தொடங்கும் 9-ஆம் தேதி இரவு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருந்து அளிக்க இருக்கிறார். அதற்கான அழைப்பிதழில் ‘பாரத குடியரசு தலைவர்’என அச்சிடப்பட்டிருக்கிறது. வழக்கமாக ‘குடியரசு தலைவர் இந்தியா’ என்றே அச்சிடப்படும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக இவ்வாறு அச்சிடப்பட்டிருக்கிறது. ‘ஆசியான் இந்தியான்’ உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி  இந்தோனேசியா செல்கிறார். பிரதமரின் பயண அறிவிப்பிலும் ‘பாரதப் பிரதமர்’ என்றே குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆர். எஸ். எஸ், இந்துத்துவா செயல்  திட்டத்தின் ஒரு பகுதியாகவே மோடி அரசு இந்தியாவின்  பெயரை ‘பாரதம்’ என்று மாற்றுவதற்கு முனைந்திருக்கிறது. இது கடும் கண்டனத்துக்கு உரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை,செப்.6-  வார இறுதி நாள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களான செப்டம்பர் 8, 9, 10  ஆகிய நாட்களில் தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழகம் சார்  பில் முக்கிய பகுதிகளிலி ருந்து கூடுதலாக 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கும்பகோணம் கோட் டத்தில் 8 மற்றும் 9 ஆம் தேதி  சிறப்பு பேருந்துகள் இயக்  கப்படும் என்று அறிவித்துள்  ளனர். திருச்சி, கும்ப கோணம், தஞ்சாவூர், திரு வாருர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சை, நாகை உள்ளிட்ட  இடங்களுக்கு சிறப்பு  பேருந்துகள் இயக்கப்படு கிறது. திருச்சியிலிருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களுக்கு இரு வழிகளிகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஊர் திரும்ப எதுவாக திங்கள் ஞாயிறு, திங்கள் கிழமைகளி லும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறி வித்துள்ளனர். பயணிகள் தங்களது பயணத்திற்கு http://www. tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து  பயணிக்க கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

ஒரு பிஸ்கட்டுக்கு ரூ. 1 லட்சம் அபராதம்!

சென்னை, செப்.6- சென்னையில் பிஸ்கட் பாக்கெட்டில் ஒரு பிஸ்கட் குறைவாக இருந்ததால், வாடிக்கையாளருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை எம்எம்டிஏ மாத்தூர் பகுதியைச் சேர்ந்த  டில்லிபாபு என்பவர் கடந்த 2021-ஆம் ஆண்டு சில்லறை விற்பனை கடையில் ஐடிசி நிறுவனம் தயாரிக்கும் ‘சன்ஃபீஸ்ட் மேரி லைட்’ பிஸ்கட் 2 பாக்கெட்டுகள் வாங்கியுள்ளார். இதில், 16 பிஸ்கட்டு களுக்கு பதிலாக 15 பிஸ்கட்டுகள் மட்டுமே இருந்துள்ளது. இதுகுறித்து சில்லரைக் கடைக்காரரிடம், ஐடிசி நிறுவனத்திடமும் முறையிட்ட  தில்லி பாபு வுக்கு உரிய பதில் கிடைக்க வில்லை. இதனைத் தொடர்ந்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் டில்லிபாபு தாக்கல் செய்த மனுவில், ஒரு பிஸ்கட் டின் விலை 75 பைசா என்றும், நாளொன்றுக்கு 50 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை தயாரிக்கும் ஐடிசி நிறுவ னம் ரூ. 29 லட்சம் ஊழல்  செய்வதாக புகார் அளித் தார். இந்த வழக்கில் வாதாடிய ஐடிசி நிறுவனம், பிஸ்கட் பாக்கெட்டுகள் எடையை வைத்துதான் கணக்கிடப் படுவதாகவும், எண்ணிக்கையை வைத்து அல்ல என்று விளக்கம் அளித்தனர். ஆனால், குறிப்பிட்ட பிஸ்கட் பாக்கெட்டின் எடையை நீதிமன்றம் ஆராய்ந்ததில், 76 கிராமுக்கு  பதில் 74 கிராம் மட்டுமே இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வழக்கு தொடர்ந்த டில்லி  பாபுவுக்கு ரூ. ஒரு லட்சம்  இழப்பீடு வழங்கவும், குறிப்பிட்ட நாளில் தயாரிக்கப்பட்ட பிஸ்கெட்டு கள் விற்பனையை நிறுத்த வும் நீதிமன்றம் உத்தர விட்டது. ஒரு சிறிய தவறி னால் ஐடிசி நிறுவனத்துக்கு ரூ. ஒரு லட்சம் நஷ்டம்  ஏற்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.