states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நாகப்பட்டினம்-இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். கப்பல் தினம்தோறும் இயக்  கப்படும் என எதிர்பார்த்த நிலையில் போதிய பயணி கள் முன்பதிவு செய்யவில்லை. இதனால், கப்பல் போக்குவரத்து ஞாயிறன்று ரத்து செய்யப்பட்டது. திங்கள், புதன், வெள்ளி கிழமைகள் என்று 3 நாட்கள் மட்டும் கப்பல் போக்குவரத்து நடை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறையில் உள்ள விடத்திலாம்பட்டியைச் சேர்ந்த பட்டியல் சமூ கத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் மீது வேறொரு சமூகத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன், பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த சிறுநீரை ஊற்றியதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் அளித்த புகா ரின்படி மணப்பாறை காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். 

ஞாயிறன்று மதியம் ஹரியானா மாநிலத்தில் உள்ள  பரிதாபாத்தை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 3.1 ரிக்டர் அள வில் லேசாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ஹரியானா பகுதி மட்டுமின்றி தில்லி  என்சிஆர் பகுதிகளிலும் உணரப்பட்டது. 

மும்பையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை விவகாரம் தொடர்பாக ராஜ்யல் லக்கிசந்த் ஜூவல்லர்ஸ், ஆர்.எல்.கோல்டு, மன்ராஜ் நகைக் கடைக்கு சொந்தமாக மும்பை, ஜல்காள், தானே, சிலோட் மற்றும் கட்ச் ஆகிய இடங்களில் உள்ள 70 அசையா சொத்துகள் முடக்கப்பட்டது. இதன்  மொத்த மதிப்பு ரூ.315 கோடி என்ற நிலையில்,  பறிமுதல் செய்யப்பட்ட அசையும் சொத்து விப ரங்களை அமலாக்கத்துறை வெளியிடவில்லை.

மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர்  பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில் பலிவால் என்ற 24 வயது இளைஞர் வேலையை விட்டு நீக்கி யதற்காக, தான் வேலை செய்து வந்த மிகப்பெரிய பெயிண்ட் கடைக்கு தீ வைத்தார். இதில் ரூ. 45 லட்சம்  மதிப்பிலான  பெயிண்ட்கள் எரிந்து நாசமானது.

தமிழ்நாட்டிலேயே பெரிய கட்சி திமுக தான். திமுக வை வளர்க்க காங்கிரஸ் பாடுபடுகிறது என்று அண்ணாமலை கூறுவது அர்த்தமற்ற குற்றச் சாட்டு. தோழமை கட்சியையே விரட்டி விட்ட மாமேதை அண்ணாமலை இவ்வாறு கூறுகிறார் என திருநாவுக்கரசர் எம்.பி. விமர்சித்துள்ளார்.