states

ஜிடிபி சரிகிறது; மக்களிடம் பணமில்லை; வேலை நெருக்கடியில் உள்ளது

புதுதில்லி, டிச. 2 -  தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளி யிட்ட தற்காலிக மதிப்பீடுகளின்படி, ஜூலை  முதல் செப்டம்பர் வரையிலான காலா ண்டில், நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 6.3 சதவிகித மாக சரிந்து விட்டது. தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 0.1 என்ற அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. வேலையின்மை விகிதம் நகர்ப்புறங்களில் 8.0 சதவிகித மாக அதிகரித்துள்ளது நாட்டின் நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் இலக்கில் 45.6 சதவிகிதத்தை தொட்டு விட்டது. இந்நிலையில், நாடு சந்திக்கும் இந்த நெருக்கடி குறித்து பிரதமர் மோடி ஒப்புக் கொள்ள மறுப்பதாகவும், அதில்  கவனம் செலுத்துவதற்குப் பதில், தேர்தல்  பிரச்சாரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வருவதாகவும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. “ஜிடிபி-யின் மெதுவான வேகம், நாட்டில் குறைந்துவரும் முதலீடு, மக்களின் பாக்கெட்டில் பணம் இல்லாதது ஆகியவை வேலை வாய்ப்பு நெருக்கடி உள்ளதையே குறிக்கிறது” என்று காங்கிரஸ் கட்சி, தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளது. “மோடி ஒரு தீர்வைக் கண்டு பிடியுங்கள், உண்மையை விட்டுப் போகாதீர்கள்” என்று காங்கிரஸ் சமூக ஊடகத் தலைவர் சுப்ரியா ஷ்னரிடே கூறியுள்ளார்.

மேலும், “உற்பத்தி  குறைகிறது, முதலீடு மற்றும் வேலைகள்  ஆபத்தில் உள்ளன. நாங்கள் எச்சரித்த போது, முதல் காலாண்டிற்குப் பிறகும் முது கில் தட்டிக் கொண்டிருந்த சைகோபான்ட் கள், எங்கே இருக்கிறார்கள்” என்றும் கேட்டுள்ளார். “பணவீக்கம், மந்தநிலை மற்றும் உலக முதலீட்டாளர்களின் வெளியேற்றம் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது; மாநில தேர்தல்களில் பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி பொரு ளாதாரத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது விமர்சித்துள்ளார். “நாட்டின் இரண்டாவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம், 13.5 சதவிகிதத்தில் இருந்து 6.3 சதவிகிதமாக குறைந்துள்ளது. 3-ஆவது காலாண்டில் இது இன்னும் குறைவாக இருக்கலாம் என்று நான் பயப்படுகிறேன். புறக்காரணிகளும் அகக் காரணிகளும் ஜிடிபி வளர்ச்சி விகிதத்தைக் குறைத்துள்ளன. அரசாங்கமோ அகக் காரணிகள் இருப்பதையே மறுக்கிறது” என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். “முதலீட்டிற்கான சூழல் சீர்குலைந்துள்ளது. முதலீட்டு க்கான விருப்பம் மோசமாக உள்ளது. அநேகமாக, மூலதன அதிகரிப்பு – வெளி யீட்டு விகிதம் (ஐ.சி.ஓ.ஆர்) மோசமடைந் துள்ளது. இந்தக் காரணிகளின் அடிப்படை யில், வளர்ச்சி விகிதத்தை உயர்த்து வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.