states

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

புதுதில்லி, ஜூலை 17-  பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று (திங்கள்)தொடங்கு கிறது. அக்னிபாதை திட்டம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி  உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனை களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்ட மிட்டுள்ளன.  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ல் தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது.  இதில் விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு நிலை பாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபடுவோர்களின் வீடுகள் இடிக்கப்படுவது, அக்னிபாதை திட்டம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட  பல்வேறு பிரச்சனைகளை நாடாளு மன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் நாடாளு மன்ற கூட்டத்தொடரில் விவாதங்கள் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள்

இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாக்கள் குறித்த  விவரம் வெளியாகியுள்ளது. வனப்பாது காப்பு திருத்த மசோதா, தேசிய பல்  மருத்துவ ஆணைய மசோதா, ஒன்றிய பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா, ஆள் கடத்தல் தடுப்பு மசோதா, குடும்ப  நீதிமன்றங்கள் மசோதா, மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா, திவால் மற்றும் திவால் சட்ட திருத்த மசோதா, பதிவு மற்றும் பாதுகாப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது ஊழல், சர்வாதிகாரம், கிரிமினல்  நாடகம், வெட்கக்கேடு உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக் கப்பட்டுள்ளதும் பெரும் பரபரப்பை, கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் கூட்டத்தொடரில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.