சென்னை, மே 30- தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையா ளர்கள் சங்கம், செவ்வாயன்று ஒருநாள் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த சங்கத்தின் சார் பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது: 2017-ஆம் ஆண்டு 1 லிட்டர் பெட்ரோல் 60 ரூபாயாக இருந்தது, தற்போது 104 ரூபாயாக உள்ளது. அதேபோல 1 லிட்டர் டீசல் 52 ரூபாயில் இருந்து 96 ரூபாயாக உயர்ந்துள்ளது. எனினும், விற்பனையா ளர்களுக்கு பெட்ரோலுக்கு ரூ. 3.06; டீச லுக்கு ரூ.1.88 என்ற அளவிலேயே எண் ணெய் நிறுவனங்கள் விளிம்பு தொகை வழங்குகின்றன. இதில் 70 சதவிகிதம் நிர்வாக செலவினங்களுக்கே செலவிடப் படுகிறது.
விளிம்புத் தொகை கட்டமைப்பு என்பது கடந்த 2010 ஆம் ஆண்டில் உள்ள செலவினங்களுக்கான கணக்கீட்டை உள்ளடக்கியது. 12 ஆண்டுகளாகியும் இன்னமும் அதே நிலையே நீடிக்கிறது. கடந்த மே 21 அன்று ஒன்றிய அரசால் குறைத்து அறிவிக்கப்பட்ட சிறப்பு கலால் வரியால் தமிழகத்தில் பெட்ரோல் லிட்ட ருக்கு ரூ.9.12; டீசல் லிட்டருக்கு ரூ.6.68 என்ற அளவில் எண்ணெய் நிறுவனங்கள் விலையைக் குறைத்தன. இதனால் அந்த விலைக் குறைப்பு நாளில் மட்டும் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் ரூபாய் வரை சில்லரை விற்பனையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டது. ஆகையால் கடந்த 2021 நவம்பர் மற்றும் 2022 மே மாதத்தில் இரண்டுமுறை சில்லறை விலை குறைப்பால் ஏற்பட்ட இழப்பை முதன்மை உரிமையாளர் என்ற அடிப்படையில் எண்ணெய் நிறுவ னங்கள் விற்பனையாளர்களுக்கு ஈடு செய்ய வேண்டும். இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்க ளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மே 31 ஒரு நாள் மட்டும் பெட்ரோல், டீசல் கொள் முதல் செய்வதை நிறுத்த உள்ளோம். இவ்வாறு தமிழ்நாடு பெட்ரோலிய விற் பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.