states

ஸ்டெர்லைட் : பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி

தூத்துக்குடி,  ஜுன் 2- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள அனுமதி  வழங்கப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை தமிழக அரசே செய்ய முடிவு செய்துள் ளது. இதற்காக துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்க ப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலைக் கழிவுகளை அகற்று வதற்கான செலவை ஸ்டெர்லைட் நிர்வாகமே ஏற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  செயலற்ற இயந்திரங்களை அகற்ற, மூலப்பொருட்கள், உதிரிபாகங்களை ஆலைக்கு வெளியே கொண்டு செல்ல, ஆலை பாதுகாப்பை ஆய்வு மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட ஸ்டெர்லைட் நிர்வா கத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள் ளன. இந்த நிலையில், ஆலையில் உள்ள  கழிவுகளை அகற்றும் அரசின் முடிவு  குறித்து ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் களுடன் ஆட்சியர் ஆலோசனைநடத்தினார்.  இந்த  கூட்டத்தில், ஆலை பராமரிப்பின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை கள், மற்றும் இது தொடர்பான பல்வேறு விவாதங்கள் ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு ஆட்சியர் கூறும்போது; ஸ்டெர்லைட் ஆலையில் பரா மரிப்புப் பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆலை பணி கள் தொடர்பாக சார் ஆட்சியர் தலைமை யில் 9 பேர் கொண்ட குழு கண்காணிப்புப் பணியில்இருப்பார்கள். இந்த குழுவில் ஸ்டெர்லைட் ஆலையை  சேர்ந்த 2 பேர் இருப்பார்கள். ஆலை பரா மரிப்புப் பணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும். ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வைத்து  பணிகள் நடைபெறும். கழிவுகளை அகற்றும் பணியின்போது 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் அகற்றம் குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆய்வு குழு  அறிக்கை தாக்கல் செய்யும் என்று தெரி வித்தார்.