சென்னை,ஜூன் 3- பல்கலைக்கழகத்தின் எல்லைக்குள் அரசியல் உரையாடல்களை தடை செய்யும் சேலம் பெரியார் பல்கலைக்கழக உத்தர வை திரும்பப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வெளி யிட்டுள்ள சுற்றறிக்கையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் அரசியல் சார்ந்த பரப்புரைகள், உரையாடல்கள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகங்களில் மாண வர்களின் ஜனநாயக உரிமைகளை பலப்படு த்துவது குறித்தும், அரசியல் அமைப்பு சாச னம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் சார்ந்த விழுமியங்களை மாணவர்கள் பெறு வதற்கும் அரசியல் சார்ந்த உரையாடல்கள் மிகுந்த முக்கியத்துவம் உடையவை.
இதன் காரணமாகவே உச்சநீதிமன்றம் வழிகாட்டு தலின் கீழ் நியமிக்கப்பட்ட முன்னாள் தலை மைத் தேர்தல் ஆணையர் ஜே.எம்.லிங்டோ கமிட்டி பல்கலைக்கழக வளாகங்களில் மாண வர் பேரவைத் தேர்தல், செனட், சிண்டிகேட் சார்ந்த பொறுப்புகளில் மாணவர் பிரதி நிதிகளை நியமிப்பது குறித்து பல்வேறு வழி காட்டுதல்களை வழங்கியுள்ளது. இத்தகு சூழலில் பெரியார் பல்கலைக்கழ கம் அரசியல் சார்ந்த உரையாடல்களில் மாண வர்கள் ஈடுபடுவதற்கு தடை விதித்து சுற்றறி க்கை வெளியிட்டிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
இத னைத்தொடர்ந்து இதுபோன்ற உத்தரவினை இதர பல்கலைக்கழகங்களும் பிறப்பிக்க வாய்ப்புள்ளது. எனவே, பெரியார் பல்கலைக்கழகத்தின் இந்த உத்தரவை திரும்பப்பெறுவதற்கு தமிழக அரசும், உயர்கல்வித்துறை அமைச்சரும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர் பேரவை தேர்தல் நடத்துவது, செனட், சிண்டிகேட் போன்ற பொறுப்புகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதற்கு உகந்த வகையில் ஜனநாயக நடைமுறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். இதர மாநிலங்களில் மாணவர் பேர வைத் தேர்தல்கள் நடந்து கொண்டுள்ள சூழ்நி லையில், தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாக மாணவர் பேரவைத் தேர்தல்கள் நடை பெறாமல் இருப்பது மாணவர்களிடையே ஜனநாயக கடமையினை புரிந்து கொள்ள உள்ள வாய்ப்பினை தட்டிப்பறிப்பதாக உள்ளது என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.