திருச்சிராப்பள்ளி, அக்.31- திருச்சி புறநகர் மாவட்டங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வலி யுறுத்தி செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். கடந்தாண்டு அக்டோபர் 6 அன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி புறநகர் மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் உள்ளூர் மக்களின் அடிப்படை கோரிக்கைகளுக்காக 217 மையங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்தாண்டு கட்சியின் 60 ஆம் ஆண்டு உதய தினத்தன்று (அக்.31) அனைத்து கிளைகளும், வட்டார தலைநகரங்களில் அரசு அலுவல கங்கள் முன்பு திரண்டு போராட்டம் நடத்துவது என புறநகர் மாவட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி அனைத்து வட்டாரத் தலைநகரங்க ளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொது மக்கள் நூற்றுக்கணக்கில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். குடிமனை பட்டா, இலவச வீட்டுமனை, பேருந்து வசதி, பேருந்து நிறுத்தம், நூறு நாள் வேலை சம்பள பாக்கி, மராமத்து பணிகள், கூட்டு றவு கடன், பெண்களின் உரிமைத்தொகை, கொள் முதல் நிலையங்கள், விற்பனை நிலையங்கள், சந்தை, இடுபொருள் கிடங்கு, தீயணைப்பு நிலை யம், ஆரம்ப சுகாதார மையம், கால்நடை மருத்துவ மனை, புதிய தாலுகா போன்ற மக்கள் கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்து வட்ட, ஒன்றியச் செய லாளர்கள் தலைமையில் இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருவெறும்பூரில் வட்டச் செயலாளர் ஏ.மல்லிகா தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.முருகேசன், எஸ்.தெய்வநீதி, ஏ.கணேசன் மற்றும் ரவி, சித்ரா, தமிழ்செல்வன், அமீர், யமுனா, கவுன் சிலர் நித்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். தா.பேட்டையில் ஒன்றியச் செயலாளர் எஸ். பாண்டியன் தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர் கே.சந்திரமோகன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலகுமார், மூத்த தோழர் ஆர்.சுப்ரமணியன், எம்.வீரவிஜயன், காமராஜ், கே.சேகர், எம்.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மண்ணச்சநல்லூரில் ஒன்றி யச் செயலாளர்கள் ஏ.கனகராஜ், வி.மனோ கரன் ஆகியோர் தலைமையில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.சம்பத், பி.பூமாலை, பி.ஆணை முத்து மற்றும் சேகர், பாலகிருஷ்ணன், நல்லை யன் ஆகியோர் கலந்து கொண்டனர். துறையூரில் ஒன்றியச் செயலாளர் ஆனந்தன் தலைமையில் சங்கிலிதுரை, ராஜேஷ், ரவி உள்ளிட்டோரும், மணப்பாறையில் தாலுகா செய லாளர் என்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் நஸ்ரின்பானு, எம். கண்ணன் மற்றும் சீனிவாசன், சுரேஷ், கணபதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். முசிறியில் ஒன்றியச் செயலாளர் டி.பி.நல்லு சாமி தலைமையில் முருகானந்தம், சத்தியராஜ், வீராசாமி, அசோக், விஜய்பாபு, பிரபு, சுப்ரமணி, மூத்த தோழர் கிருஷ்ணன் உள்ளிட்டோரும், உப்பிலியபுரத்தில் ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்துக்குமார் தலைமையில் அன்பழகன், முத்துக் குமார், கணேசன், மங்கள்ராஜ் உள்ளிட்டோ ரும், புள்ளம்பாடியில் ஒன்றியச் செயலாளர் டி.ரஜினிகாந்த் தலைமையில் எம்.அடைக்கல ராஜ், வி.யோகராஜ், பி.தமிழ்செல்வன், வினோத், தாஸ், செல்லதுரை, குமார், அருமைராஜ் உள்ளிட் டோரும் கலந்து கொண்டனர்.
வையம்பட்டியில் ஒன்றியச் செயலாளர் பி.வெள்ளைச்சாமி தலைமையில் அந்தோணி, முருகன், பிரேம்குமார் ஆகியோரும், தொட்டி யத்தில் ஒன்றியச் செயலாளர் எல்.சத்தியமூர்த்தி தலைமையில் முன்னாள் ஒன்றியச் செயலாளர் முருகன், முருகானந்தம் ஆகியோரும், மருங்கா புரியில் ஒன்றியச் செயலாளர் பி.தியாகராஜன் தலைமையில் அழகர்சாமி, அண்ணாதுரை, முருகேசன், கணேசன், சின்னையா, புஷ்பராஜ், கவிதா, ஆறுமுகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேற்கண்ட போராட்டங்களில் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை, மாவட்டச் செயலாளர் எம்.ஜெய சீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். சந்திரன், கே.சிவராஜன், வி.சிதம்பரம், ஆர்.நடரா ஜன், ஜெ.சுப்பு, பி.ராமநாதன், எம்.பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான அக்.31 ஆம் தேதியையொட்டி கடந்த ஒரு வார மாக 260-க்கும் மேற்பட்ட கட்சிக் கிளைகள் கூடின. மேற்கண்ட போராட்டங்களை விளக்கி துறை யூர், தா.பேட்டை, மணப்பாறை ஆகிய பகுதி களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் தெருவிளக்கு, மயானப்பாதை, சாலைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவை களைக்கூட நிறைவேற்றாத அதிகாரிகளின் அலட் சியத்தால் மக்களின் குமுறல் வெளிப்பட்டது.