காசர்கோடு, நவ.19- நமது நாட்டின் மகத்தான ஜனநாயக வரலாற்றில் புதிய அத்தியாயம் காசர் கோட்டில் புதிய கேரளத்துக் கான சந்திப்பு (நவ கேரள சதஸ்) மூலம் துவங்கி யுள்ளதாக முதல்வர் பின ராயி விஜயன் தெரிவித்தார். காசர்கோடில் ஞாயி றன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன் மேலும் கூறிய தாவது: நவகேரள சங்கமத்தில் பங்கேற்பதற்காக மாநி லத்தின் வடக்கு முனையில் உற்சாகமாக மக்கள் கூட்டம் அலைமோதுவது, வரும் நாட்களில் கேரளா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். பல்வேறு தரப்பு மக்களும் ஒருமன தாக ஒன்று கூடியுள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இடது சாரி அரசுடன் இருக்கிறோம் என்ற பிரகடனத்தின் மீள் நிகழ்வே நேற்றைய (நவ.18) துவக்க நிகழ்ச்சி. கேரளம் அடைந்துள்ள விரிவான வளர்ச்சியை அனைத்துத் துறைகள் மூலம் சமூகத்தின் அனைத்துத் தள ங்களிலும் முன்னெடுத்துச் செல்ல இது ஒரு திடமான ஆதரவாகும்.
பெரும் சவால்கள்
கேரளம் பெரும் சவால் களை எதிர்கொள்கிறது. சொந்த வரி வருவாயிலும் உள்நாட்டு உற்பத்தியிலும் வரலாறு காணாத லாபம் கிடைத்தாலும், கூட்டாட்சி அமைப்பையே குழி தோண்டிப் புதைக்கும் ஒன்றிய அரசின் கொள்கை களால் பொருளாதார நெருக் கடியை எதிர்கொள்கிறோம். நாட்டின் நலனுக்காக அந்தக் கொள்கைகளுக்கு எதிராக இயல்பாகவே அர சாங்கத்துடன் இணைய வேண்டிய எதிர்க்கட்சி, அரசாங்கத்தின் புகழைக் குழிதோண்டிப் புதைக்கும் வாய்ப்பாகக் பார்க்கிறது. துரதிர்ஷ்டவசமாக ஊட கங்களின் பெரும் பகுதியும் மக்களிடம் இருந்து தற்போ தைய நிலையை மறைப்ப தில் எதிர்த் தரப்பினருடன் இணைந்துள்ளன. மறைக்கப்பட்ட உண் மைகளை மக்களுக்கு உணர்த்தவும், மக்கள் பிரச்ச னைகளை கையாள்வதில் நேர்மையை உறுதி செய்ய வும் நவகேரள சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. நாட்டின் உண்மையான பிரச்சனைகளை சமூகத்தில் விவாதப் பொருளாக மாற்ற மனப்பூர்வமாக மறுப்பவர் களைத் திருத்த முடியாது. அது நிகழும்போது, ஜன நாயக மாற்று வழிகளைக் கடைப்பிடிக்க வழி இருக் கிறது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும் விரிவு படுத்துவதும் ஜனநாயக அர சாங்கத்தின் கடமையாகும். அந்தக் கடமையை நிறை வேற்றுவது நவகேரள சங்கமங்களின் கடமை. வரும் நாட்களில் பய ணத்தின் ஒரு பகுதியாக இது இன்னும் தெளிவாகும்.
1908 புகார்கள்
சனிக்கிழமையன்று துவக்க விழா நடைபெற்ற இடம் அருகே அமைக்கப் பட்டிருந்த மேஜையில் 1908 புகார்கள் வந்தன. இவை தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும். புகார்களைக் கையாளும் வசதிகள் மேலும் மேம் படுத்தப்படும். தொடக்க கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் பன்முகத்தன்மை சுட்டிக்காட்டப்பட்டது. அதில் பெண்களின் பங்கு அளப்பரியது. பெண்களின் பாதுகாப்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை களை ஏற்றுக்கொண்டதன் பிரதிபலிப்பே இது. இவ்வாறு அவர் கூறினார்.