சென்னை, ஜூலை 28 - நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அற நிலையத்துறை ஆணை யருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை சூளையில் உள்ள சொக்கவேல் சுப்பிர மணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்த மான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள்,நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக் கூறி, உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசார ணையின் போது, சம்பந்தப் பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக துறை சார்பில் தெரிவிக்கப் பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடவடிக் கையை விரைவுபடுத்த கடந்தாண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று மீண்டும் நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கில், துறை யின் உதவி ஆணையர் தாக்கல் செய்த அறிக்கை யில், கோவில் சொத்தை குத்தகைக்கு எடுத்திருந்த தனி நபர்களுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டு உள்ளதாகவும், வேண்டு மென்றே நீதிமன்ற உத்த ரவை அவமதிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி அனிதா சுமந்த், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த காலதாமத மானதற்கான காரணங் களை உதவி ஆணையர் அறிக்கையில் தெரிவிக்க வில்லை; வருத்தமும் தெரிவிக்கவில்லை. எனவே, இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாயும், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த அபராத தொகையை இரண்டு வாரங்க ளில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மனைக்கு வழங்க வேண் டும் என்றும் குறிப்பிட்டுள் ளார்.