states

தீக்கதிர் விரைவு செய்திகள்

‘பைரேன் சிங்கால் அமைதி திரும்பாது!’

“மணிப்பூரில் ஆயுத மேந்திய கும்பல்கள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்கள் வெறித் தனமாக செயல்படுகின்றன. பெண்களும், குடும்பங்களும் மிக மோசமான, கற்பனை  செய்ய முடியாத கொடுமை களை எதிர்கொண்டுள்ளனர். பைரேன் சிங் முதல்வராக இருக்கும் வரை மணிப்பூரில் நீதியும், அமைதியை நோக் கிய நகர்வும் இருக்காது” என்று காங்கிரஸ் பொதுச்செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

நீதி வேண்டும்:  நாகா  பழங்குடிகள் வலியுறுத்தல்!

“மணிப்பூரில் பாதிக்கப்  பட்ட பெண்கள் சார்ந்த வழ க்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். பாரபட்ச மின்றி வழக்கு விசாரணை நடைபெற வேண்டும். குக்கி  இனப் பெண்களுக்கு விரைந்து நீதி கிடைக்க மணிப்பூர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று ஐக்கிய நாகா கவுன்சில், அகில இந்திய நாகா மாண வர்கள் கூட்டமைப்பு, நாகா  மக்கள் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகி கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காவிரியில்  தமிழ்நாட்டுக்கு  நீர் திறப்பு!

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதி களில் மழை பெய்து வருவ தால், கர்நாடகாவின் கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 2,500 கன அடி நீரும், கே.ஆர்.எஸ்.  அணையில் இருந்து 2,487  கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

‘ஒரே வழி ஜனாதிபதி ஆட்சிதான்’

“மணிப்பூரில் அமைதி திரும்ப ‘தற்போதுள்ள ஒரே வழி:  மணிப்பூர்  முதல்வர் பிரேன் சிங்கை பதவி நீக்குவதும், 356  சட்டப்பிரிவை (குடியரசுத் தலை வர் ஆட்சி) அமல்படுத்துவதும் தான்” என்று ஒன்றிய முன் னாள் அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் டுவிட்டரில் குறிப்பிட்டுள் ளார். நிர்பயா சம்பவத்தி லிருந்து இதுவரை எதுவும் மாறவில்லை. உன்னாவ், ஹத்ராஸ், கதுவா,  பில்கிஸ் வழக்கின் குற்றவாளி கள் விடுவிக்கப்பட்டு உள்ள னர். இதற்காக, பிரதமர் மோடி நாட்டின் பெண்களிடம் மன்னி ப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2023-ல் மட்டும் 74 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது

2023-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 74 தமிழ் நாட்டு மீனவர்களை  இலங்கை கடற்படையால் கைது  செய்யப்பட்டுள்ளதாக, திமுக  எம்.பி. கனிமொழி எழுப்பிய  கேள்விக்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சர் முர ளிதரன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

அபாய கட்டத்தில் தில்லி வெள்ளம்!

யமுனை ஆற்றில் தண்ணீரின் அளவு 205.33 மீட்டராக இருக்கும்போது அபாய எச்சரிக்கை விடப் படும். ஞாயிறன்று காலை  எட்டுமணி அளவில் தண்ணீ ரின் அளவு 205.9 மீட்டராக உள்ளது. இதுஞாயிற்றுக்கிழ மை மாலை 206.7 மீட்டரை எட்டும். இதனால் எந்த நேர மும் தில்லிக்குப் பாதிப்பு ஏற்பட லாம் ஒன்றிய நீர்வளத்துறை ஆணையம் எச்சரித்துள்ளது.

விடுதலைப் போராட்ட வீரர்களின் சிலைகளை அலங்கரிக்க உத்தரவு

சென்னை, ஜூலை 23- எதிர்வரும் சுதந்திர தினத்தன்று மாநிலத்தில் உள்ள அனைத்து விடு தலை போராட்ட வீரர்களின்  சிலை களையும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் உத்தர விடப்பட்டுள்ளது. சென்னையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமி நாதன் தலைமையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலு வலர்களின் ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது.  அதில் எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலுள்ள விடுதலை போராட்ட தலைவர்களின் சிலை களை தூய்மைப்படுத்தி, மலர் மாலை அணிவித்து, அரங்கங்கள்,  நினைவு மண்டபங்கள் மற்றும் மணி மண்ட பங்கள் என அனைத்தும் வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வலியுறுத் தப்பட்டுள்ளது. 

மேகதாது அணை திட்ட அறிக்கைக்கான அனுமதியை ரத்து செய்ய  கோரிக்கை

சென்னை.ஜூலை 23 மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகம் அரசு, திட்ட அறிக்கை தயாரிக்க ஒன்றிய அரசு அளித்த அனு மதியை திரும்பப் பெற வேண்டும் என  பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத் தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், மேகதாது அணைக்கு அனு மதி அளிப்பது குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிப் பதற்கு கூட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க ஒன்றிய அரசு அளித்த அனுமதி தவறு என்று குறிப்பிட்டுள்ள அவர், திட்ட அறிக் கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தொடர்ந்து, மேகதாதுவில் அணை கட்டுவதற்காகவும், நிலம்  கணக்கெடுப்புப் பணிகளை மேற் கொள்வதற்காகவும்  வன அதிகாரி களை நியமித்த கர்நாடகா அரசுக்கு  ராமதாஸ் கண்டனம் தெரிவித்து ள்ளார். மேகதாது விவகாரம் தொடர் பாக கர்நாடக அரசு மீது தமிழ்நாடு அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

திருவண்ணாமலை கோயிலில்  தரிசன கட்டணம் ரூ. 500ஆக உயர்வு

சென்னை, ஜூலை 23- திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலில் தரிசன கட்டணம் ரூ.50இல் இருந்து ரூ. 500ஆக உயர்த்தப்பட்டதால்  பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி யுள்ளனர் அண்ணாமலையார் கோயில் தமிழ்நாட்டின் தலைச்சிறந்த பக்தி தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருவண்ணா மலைக்கு செல்கின்றனர். அதிலும் மாதந்தோறும் பவுர்ணமி நாட்க ளில் திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் தமிழகம்  மட்டுமல்லாது நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் திருவண்ணா மலையில் குவிகின்றனர். இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிர்த்து குறுக்கு வழி யில் சாமி தரிசனம் செய்ய வைப்ப தாக பக்தர்களிடம் சில இடைத் தரகர்கள் ஈடுபடுவதாக அவ்வப் போது குற்றச்சாட்டு எழுவது தொடர் கதையாகி உள்ளது. இதனால் கட்ட ணம் செலுத்தி வரிசையில் காத்தி ருக்கும் பக்தர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். ஏற்கெனவே கோயில் நிர்வாகம் கட்டண தரிசனத்திற்கு ரூ.50 கட்டணம் வசூலித்து வந்தது. இந்நிலையில் தற்போது முன்னறிவிப்பு ஏது மின்றி சுவாமி காணிக்கை வரவு என நபர் ஒருவருக்கு ரூ.500 வீதம் வசூலிக்கப்படுகிறது. முறையான அறிவிப்பு ஏதும் இல்லாமல் அதிரடி யாக கட்டணம் உயர்த்தப்பட்டி ருப்பது பக்தர்களிடையே அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.