states

தீக்கதிர் விரைவு செய்திகள்

600 இந்திய மீனவர்களை விடுவிக்க பாக்.முடிவு

பாகிஸ்தான் சிறையில் உள்ள 600 இந்திய மீனவர் களை  விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது முதற்கட்டமாக மே 12 அன்று 200  மீனவர்களையும், மே 14  அன்று 400 மீனவர்களையும் விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.  இத்தகவலை கோவாவில் ஷாங்காய் கூட்டுறவு ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

பழனி கோவில் நிர்வாகம் தடை

பழனி முருகன் கோவிலின் நடைமுறையிலும், பாரம்பரிய விழாக்களிலும் இல்லாத போகர் ஜெயந்தி என்ற பெயரில் விழா நடத்த, போகர் சன்னதி பூசகர்கள்  முயற்சிக்கு பழனி கோவில் நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில் நடைமுறையில் இல்லாத எந்த விழாக்களையும் நடத்த அனுமதிக்க முடி யாது எனவும் பழனி கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

பாஜகவின் வெறுப்பு அரசியலே  மணிப்பூர் கலவரத்திற்கு காரணம்!

இம்பால், மே 5- மணிப்பூர் கலவரத்திற்கு பாஜக-தான் காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  “மணிப்பூர் பற்றி எரிகிறது. அழகான அந்த மாநிலத்தில் சமூகங்களுக்கு இடையே பாஜக பிரிவினையை ஏற்படுத்தி, அமைதியை அழித்து விட்டது. பாஜக-வின் வெறுப்பூட்டும் பேச்சு, மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கை, அதிகாரத்தின் மீது அதற்கு இருக்கும் பேராசை ஆகியவையே கலவரத்திற்கு காரணம்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டி யுள்ளார். மக்கள் அமைதியை கடைப்பிடிக்கு மாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். “மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தவும், இயல்பு நிலைக்கு மாநிலம் திரும்பவும் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும். மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என ராகுல் காந்தி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

வத்தலக்குண்டு சாலை விபத்தில்  மயிலாடுதுறையைச் சேர்ந்த 3 பேர் பலி

சின்னாளப்பட்டி,மே 5- வத்தலக்குண்டுவில் நிகழ்ந்த சாலை விபத்தில்  மயிலாடுதுறையைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ரபீக் (வயது 50). இவர் வெற்றிலை விவசாயம் செய்து  வந்தார். இவர் தொழில் நிமித்தமாக  கேரள மாநிலம் மூணாறுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் வியாழக்கிழமையன்று இரவு தனது காரில் மூணாறுக்கு சென்று கொண்டிருந்தார். காரில் அவரது உற வினரான சமீரா பானு ( 41) வந்தார். காரை திருவாரூர் மாவட்டம் தட்சணம்பகுதியை சேர்ந்த வீரமணி என்பவர் ஓட்டி வந்தார்.இவருக்கு உதவியாக சேகர் என்பவர் வந்தார். கேரளம்  வண்டிப்பெரியார் பகுதியில் இருந்து டீ தூள் லோடு ஏற்றிக்கொண்டு லாரி  ஒன்று கோவை நோக்கி வந்து கொண்டி ருந்தது. இந்த லாரியை குஞ்சுமோன் (வயது 49) என்பவர் ஓட்டி வந்தார். வத்தலக்குண்டுவில் உள்ள திண்டுக்கல்- தேனி மெயின் ரோட்டில் வெள்ளி யன்று அதிகாலை வந்தபோது,  எதிர்பாராத  விதமாக கார் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் காருக்குள் இருந்த சமீரா  பானு, ரபீக், வீரமணி ஆகியோர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியாகினர்.  சேகர் படுகாயமடைந்தார் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்தலக்குண்டு காவல்துறையினர் காயமடைந்தவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்த னர்.  மேலும் பலியான  மூன்று பேரின் உடல் களை வத்தலக்குண்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் . விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஏஓ கொலை வழக்கில் கைதான  2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்!

தூத்துக்குடி, மே 5 தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் கைதான 2பேர் உட்பட 4 பேர் மீது வெள்ளியன்று ஓரே நாளில்  குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.  கடந்த ஏப்ரல் 25 அன்று முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் சேவியர் (55)  என்பவரை மணல் கடத்தலுக்கு இடையூறாக இருந்ததால் அவரது அலுவலகத்தில் வைத்து கொலை  செய்த வழக்கில் தூத்துக்குடி முறப்பநாடு கலியாவூர் வேதகோவில் தெருவைச் சேர்ந்தவர்களான ராமசாமி மகன் ராமசுப்பிரமணியன் (எ) ராமசுப்பு (41) மற்றும் முருகன் மகன் மாரிமுத்து (31) ஆகியோரை முறப்பநாடு காவல்நிலையத்தினர் கைது செய்தனர்.  கடந்த 2021ஆம் ஆண்டு ஜுலை மாதம் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து 17 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து அதை வீடியோ எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவேற்றம் செய்த வழக்கில் ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்தவர்களான இனிகோ மகன் ஜெப்ரின் (25) மற்றும் பிரவிந்தன் மகன் ரெவின்டோ (23) ஆகியோரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர்.  மேற்கண்ட வழக்குகளில் கைதான 4பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 4பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

காற்றழுத்த  தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும்

சென்னை, மே 5- வங்கக் கடலில் வரும் 7 ஆம் தேதி  உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 9 ஆம் தேதி புயலாக வலுப்பெ றும் என்றும், அதன் காரணமாக தெற்கு தீபகற்ப இந்திய பகுதியில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதி யில் வரும் 6 ஆம் தேதி வளிமண்டலத் தில் காற்றுசுழற்சி உருவாக வாய்ப் புள்ளது. இதன் தாக்கத்தால் 7 ஆம்  தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, 8 ஆம் தேதி காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறும். அதன் பிறகு 9 ஆம்தேதி புய லாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கோடை வெயில் வருகிற 29 ஆம்  தேதி நிறைவடைகிறது. இந்த கால கட்டத்தில் வெப்பநிலை மேலும் அதி கரிக்கக்கூடும். எனினும், தென்கிழக்கு  வங்கக்கடலில் உருவாகும் காற்ற ழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப் பெறும் என்பதால் இந்த முறை அக்னி  நட்சத்திர காலத்தில் வெப்பநிலை கடுமையாக இருக்காது என எதிர்பார்க் கப்படுகிறது என்றும் கூறினார்.

221 சட்டவிரோத கடன் செயலிகள் அகற்றம்

சென்னை, மே 5- கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 4 மாதங்களில் 221 சட்டவிரோத  கடன் செயலிகள் அகற்றப்பட்டுள்ள தாக தமிழ்நாடு சைபர் க்ரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக போலி கடன் செயலியை உருவாக்கி மோசடி கும்பல் கடன் கொடுத்து வந்தது. கொடுத்த பணத்தை விட  அதிக தொகையை கேட்டு வாடிக்கை யாளர்களை மிரட்டி வந்தனர். கேட்கும்  பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் அவர்களது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களது உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டல்  விடுத்து வந்தனர். இதனால் தமிழ் நாட்டில் தற்கொலை சம்பவங்களும் அதிகளவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சட்டவிரோத கடன் செயலிகளை தடை செய்ய, பிளே ஸ்டோரில் இருந்து நீக்கக்கோரி கூகுள் நிறுவனத்திற்கு தமிழ்நாடு சைபர் க்ரைம் கடிதம் எழுதி இருந்த நிலையில், கடந்த 4 மாதங்களாக சட்ட விரோதமாக கூகுள் பிளே ஸ்டோரில்  இருந்த 221 கடன் செயலிகளை கூகுள் நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் ட்விட்டர், யூடியூப் போன்றவை தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் கள் மற்றும் பொதுமக்கள் என தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களின் 386 அவதூறு வீடியோக்களை முடக்குமாறு யூடியூப் நிறுவனத்திற்கு கோரிக்கை அனுப்பியுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியால் அங்கீ கரிக்கப்படாத இந்த சட்டவிரோத செயலிகளில் சிக்காமல் பொதுமக் களைப் பாதுகாக்க கூடுதல்  61 கடன் செயலி ஆப்களை அகற்றக் கோரி மாநில சைபர் கிரைம் காவல்  துறையினர் நடவடிக்கை எடுத்துள்ள னர்.

பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்கள் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, மே 5- விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்கள் தமிழ் நாடு அரசின் ஊக்கத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை திட்டம் (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுக் கள் மட்டும் அதிகபட்சம் 25 நபர்கள்  வரை, அதிக பட்சம் உதவித் தொகை ஓர் ஆண்டுக்கு ரூ.30  லட்சம் வரை)கடந்த 2-ஆண்டுக ளில் ஒரு முறையாவது உலக தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். அல்லது கடந்த 2 ஆண்டு காலங்களில் ஒலிம்பிக் அல்லது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் தேசிய  அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றிருக்க  வேண்டும்.

பன்னாட்டு அளவி லான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (அதிகபட்சம் 75 நபர்கள், 10 மாற்றுத்திறனாளிகள் உட்பட  அதிகபட்சம் உதவித் தொகை ஓர்  ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை) அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி களில் தங்கப்பதக்கம் வென்றி ருக்க வேண்டும். ஒலிம்பிக், ஆசிய விளை யாட்டு போட்டி, காமன்வெல்த் போட்டியில் தனிநபர் விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றிருக்க வேண்டும். வெற்றியாளர்கள் மேம்பாட்டுத்திட்டம் (அதிக பட்சம் 100 நபர்கள், 10 மாற்றுத்  திறனாளிகள் உட்பட மற்றும் அதிகபட்சம் உதவித் தொகை ஓர்  ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை) அரசு, அரசால் அங்கீகரிக்கப் பட்டுள்ள விளையாட்டு அமைப்பு களால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர்கள் மட்டும். இந்த திட்டங்களில் சேர்ந்து  பயன்பெற விரும்பும் விளை யாட்டு வீரர் மற்றும் வீராங்கனை கள் தங்களது விண்ணப்பங் களை வருகிற 20 ஆம் தேதி மாலை  5 மணி வரை சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ஆடுகளம்  தகவல் மையம் 95140 00777 மற்றும்  78258 83865 என்ற எண்களை, அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பொது வாக்கெடுப்பு இல்லை: பிரான்ஸ் மக்கள் கொந்தளிப்பு

பாரிஸ், மே 5- பிரான்ஸ் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அரசியலமைப்பு கவுன்சில் புதிய ஓய்வூதியம் தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்கும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டாம் என்று கூறியுள்ளது. தற்போதுள்ள ஓய்வூதியத்திற்கான வயதை 62இல் இருந்து 64 ஆக உயர்த்துவது, ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்காலத்தை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட புதிய ஓய்வூதியத்திட்டத்தை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கொண்டு வந்தார்.  இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அனைத்துத் தொழிற்சங்கங்களும், மக்களின் பல்வேறு தரப்பினரும் இந்தப் புதிய திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரினர். நாடாளுமன்றத்தில் இத்திட்டத்திற்குப் போதிய ஆதரவு கிடைக்காது என்பதால், ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தில் மக்ரோன் கையெழுத்திட்டார். 2023 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரையில் 12 முறை பொது வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசியலமைப்பு கவுன்சிலிடம் முறையீடு செய்யப்பட்டது. புதிய ஓய்வூதியத் திட்டம் வேண்டுமா, வேண்டாமா என்று பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கைக்கு சுமார் 250 இடதுசாரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் அரசியலமைப்பு கவுன்சில் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்றுக் கொண்டிருந்தால் 48 லட்சம் பேரின் கையெழுத்துகளை எதிர்ப்பாளர்கள் பெற வேண்டியதிருக்கும். அதை ஒப்படைத்தால் நாடு தழுவிய பொது வாக்கெடுப்பு நடக்கும். தற்போது அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

சூடானிலிருந்து 3,584 இந்தியர்கள் மீட்பு

புதுதில்லி,மே 5-  உள்நாட்டு போரால் பாதிக்கப் பட்டுள்ள சூடானில் இருந்து இந்தி யர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். ஆபரேஷன் காவேரி என்ற திட்டத்தின் கீழ்  மும்பை, அகமதா பாத், சென்னை, கொச்சி, பெங்களூரு, தில்லி ஆகிய நகரங் களின் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் அவர்கள், வெளியுறவு அமைச்சகங்கள் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள பதிவில், ‘சூடானில் உள்ள இந்தியத் தூதரகம் அளித்துள்ள புள்ளி விபரங்களின்படி, ஆப ரேஷன் காவேரி திட்டத்தின் கீழ் இது வரை 3,584 இந்தியர்கள் மீட்கப் பட்டனர். இத்திட்டம் தொடங்கப் பட்ட ஒன்பது நாட்களில், 5 இந்திய  கடற்படைக் கப்பல்கள் மற்றும் 16 இந்திய விமானப்படை விமானங் கள் மூலம் மீட்புப் பணிகள் நடை பெற்று வருகிறது’ என்று தெரி வித்துள்ளார்.

ம.பி.யில் பயங்கரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சுட்டுக்கொலை

போபால், மே 5- மத்தியப்பிரதேச மாநிலம் மொரேனா வை அடுத்துள்ள லோபோ கிராமத்தில் நிலத்தக ராறு வன்முறையாக மாறியதில் ஒரே குடும்பத் தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட ஆறு  பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இரு வர் பலத்த காயங்களுடன் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லோபா கிராமத்தைச் சேர்ந்த தீர் சிங்  தோமர் மற்றும் கஜேந்திர சிங் தோமர் ஆகி யோரின் குடும்பங்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை காலை பத்து மணியள வில் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொடூரம் நிகழ்ந்தது. கடந்த 2013- ஆம் ஆண்டு குப்பைக் கழிவு களைக் கொட்டுவது தொடர்பாக இரு குடும்பங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள் ளது.  அப்போது தீர் சிங் தோமரின் குடும்பத்தை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர், இதை யடுத்து கஜேந்திர சிங் தோமர் குடும்பத்தினர் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். பின்னர், நீதிமன்றத்திற்கு வெளியே இரு குடும்பத்தினரும் சமரசம் செய்து கொண்டனர், இதையடுத்து கஜேந்திர சிங் குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை காலை கிராமத்திற்குத் திரும்பியுள்ளனர்.  இதையறிந்த தீர் சிங் தோமரின் குடும்பத்தினர்  கஜேந்திர சிங் குடும்பத்தினரைத் தாக்கியுள்ளனர்.  தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டதில் ஆறு பேர் பலியாயினர். கொல்லப்பட்ட ஆறு பேரில் கஜேந்திர சிங் தோமர் மற்றும் அவரது இரண்டு மகன்களும் அடங்குவர்.

பொது வாக்கெடுப்பு இல்லை: பிரான்ஸ் மக்கள் கொந்தளிப்பு

பாரிஸ், மே 5- பிரான்ஸ் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அரசியலமைப்பு கவுன்சில் புதிய ஓய்வூதியம் தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்கும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டாம் என்று கூறியுள்ளது. தற்போதுள்ள ஓய்வூதியத்திற்கான வயதை 62இல் இருந்து 64 ஆக உயர்த்துவது, ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்காலத்தை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட புதிய ஓய்வூதியத்திட்டத்தை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கொண்டு வந்தார்.  இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அனைத்துத் தொழிற்சங்கங்களும், மக்களின் பல்வேறு தரப்பினரும் இந்தப் புதிய திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரினர். நாடாளுமன்றத்தில் இத்திட்டத்திற்குப் போதிய ஆதரவு கிடைக்காது என்பதால், ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தில் மக்ரோன் கையெழுத்திட்டார். 2023 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரையில் 12 முறை பொது வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசியலமைப்பு கவுன்சிலிடம் முறையீடு செய்யப்பட்டது. புதிய ஓய்வூதியத் திட்டம் வேண்டுமா, வேண்டாமா என்று பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கைக்கு சுமார் 250 இடதுசாரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் அரசியலமைப்பு கவுன்சில் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்றுக் கொண்டிருந்தால் 48 லட்சம் பேரின் கையெழுத்துகளை எதிர்ப்பாளர்கள் பெற வேண்டியதிருக்கும். அதை ஒப்படைத்தால் நாடு தழுவிய பொது வாக்கெடுப்பு நடக்கும். தற்போது அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.