ஹைதராபாத், அக்.9- இந்தியாவில் மக்கள் தொகை அதி கரிப்பு குறித்தான தரவுகளை முன்வைத்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசுவதற்கு தயாரா? முஸ்லிம் பெண் களின் கருவுறுதல் விகிதம் வெகுவாகக் குறைந்து விட்டது என்ற உண்மையையும் பகவத் மறைக்கிறார் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத்தில் கார்பா நிகழ்ச்சியின் போது கல் வீசியதாக காவல்துறையினர் சிலரை கட்டி வைத்து காட்டுமிராண்டித்தன மாக தாக்கினர். அந்த வீடியோ இணை யத்தில் வைரலானது. இந்த நிகழ்வை சுட்டிக் காட்டிப் பேசிய ஓவைசி, “எப்போதெல்லாம் நாட்டில் பாஜக ஆட்சி நடக்கிறதோ அப்போதெல்லாம் முஸ்லிம்கள் ஒரு திறந்த சிறையில் தான் உள்ளனர். மதரஸாக்கள் கூட தரைமட்ட மாக்கப்படுகிறது. இங்கு தெரு நாய் களுக்கு இருக்கும் மரியாதை கூட முஸ் லிம்களுக்கு இல்லை என்று கூறினார்.
முஸ்லிம்கள் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை
தசரா விழாவை ஒட்டி நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடந்த விழாவில் பேசிய மோகன் பகவத், “இந்தி யாவின் தற்போதைய தேவை மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டமும் மதம் சார்ந்த சமமற்ற நிலையைத் தடுத்து கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதுமே ஆகும். இந்த இரண்டு பிரச்சனைகளை யும அலட்சியப்படுத்தாமல் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மதம் சார்ந்து மக்கள் தொகையில் சம மற்ற நிலை உருவாகினால் அது தெற்கு சூடான், கொசோவோ நாடுகளில் ஏற்பட்ட நிலையை உருவாக்கும். மக்கள் தொகை கொள்கையை வகுத்தால் தான் பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டும். மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு பூகோள ரீதியாகவும் எல்லைப் பிரச்சனை களை உருவாக்கும். இவைதவிர கட்டாய மதமாற்றமும், ஊடுருவலும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது” எனப் பேசியிருந்தார். ஹைதரபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றியல் பங்கேற்ற ஓவைசி இதற்கு பதிலளித்துள்ளார். ““நான் உண்மை யைக் கூறுகிறேன். மக்கள் தொகை பெருகி வருகிறது. எங்கு அதிகரிக்கிறது? என்பது குறித்தான தரவுகளை வைத்து பகவத் பேச வேண்டும். தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை ஐந்தின்படி இந்தியாவில் முஸ்லிம்களின் கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது. இந்தியாவில் முஸ்லிம்கள் தான் அதிக ளவில் காண்டம் பயன்படுத்துகின்றனர். முஸ்லிம் குடும்பங்களில் இரு பிள்ளை களுக்கு இடையேயான இடைவெளி அதி கரித்துள்ளது. இதைப்பற்றியெல்லாம் ஏன் பகவத் பேசவில்லை என்று கேள்வி எழுப்பினார்.