நாம் தமிழர் என்ற பெயரில் ஒரு கட்சி யை வைத்துக் கொண்டு சலம்பி வரும் சீமானின் உளறல்களும், அரற்றல் களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எந்தவொரு பிரச்சனையிலும் அடிப்படைப் புரிதலோ, அரசியல் அறிவோ அற்றவர் அவர். ஆனால் தங்களுக்கு ஏதாவது செய்தி கிடைக்கும் என ஊடகங்கள் அவரை விரட்டிக் கொண்டே திரிகின்றன. அவரும் ஊடகவிய லாளர்களை செருப்பால் அடிப்பேன் என்று சொல்கிற அளவுக்கு மரியாதை கொடுத்தா லும் அவர்கள் அடங்குவதாக இல்லை. இவர் பெரும்பாலான சமயங்களில் ஆர்எஸ்எஸ் குரலிலேயே பேசுவார். அவ்வப் போது தம்மை பெரிய போராளி போல வாய்வீரம் காட்டுவார். இவரும் இவரது தம்பி மார்களும் பாஜகவின் அட்டூழியங்கள் பற்றி பேசுவதைவிட தமிழ்நாட்டில் திமுகவையும் அதன் தோழமைக் கட்சிகளையும் குறி வைத்து தாக்குவதில்தான் குறியாக இருப் பார்கள். அதுதான் அவர்களுக்கு கொடுக்கப் பட்ட அசைன்மெண்ட்.
எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் தாத்தா, அப்பா, சித்தப்பா, பிள்ளைகள் என்று ஏதோ குடும்பச் சுற்றுலாவுக்கு போனது போல உறவு முறை கொண்டாடுவார். பெரியாரை தந்தை என்று கூறியவர் இப்போது வடுக வந்தேறி என்று வசைபாடு கிறார். அவர் தனது சொத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக திருமணம் செய்து கொண் டார் என்றெல்லாம் பேசி வருகிறார். தான் ஆட்சிக்கு வந்தால் வடமாநில தொழிலாளி மீது கஞ்சா கேஸ், ரேப் கேஸ் போடுவேன் என்றெல் லாம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி வரு கிறார். இந்நிலையில் மணிப்பூருக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறிக்கொண்டு கூட்டம் சேர்த்தவர், இந்த வன்முறைக்கு கார ணமான ஒன்றிய, மாநில பாஜக அரசுகளை விட்டுவிட்டு இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர் களும் சாத்தானின் பிள்ளைகள், அவர்கள் அநீதிக்கு எதிராக போராடவில்லை என்று அவதூறு செய்தார். இது சர்ச்சையானவுடன் இஸ்லாமியர் களும் கிறிஸ்தவர்களும் எனக்கு ஓட்டுப்போடு வதில்லை. நான் இப்போது அவர்களைப் பற்றி கூறியதற்கு மன்னிப்புக் கேட்டால் எனக்கு ஓட்டுப்போடுவார்களா என்று தனக்கு வாக்க ளிக்காததை மனதில் வைத்து வன்மம் கக்கினார்.
அண்மையில் பாஜக எம்.பி.யான சாக்ஷி மகாராஜ் என்பவர் பாகிஸ்தானைவிட இந்தியா வில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். எனவே இந்தியாவில் அவர்களுக்குள் உள்ள சிறுபான்மை அந்தஸ்தை உடனே நீக்க வேண்டும் என்றார். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையான மக்களுக்கு அடங்கித் தான் நடக்க வேண்டும். அவர்கள் இரண்டாந் தர குடிமக்களாகத்தான் நடத்தப்படுவார்கள் என்றெல்லாம் தொடர்ந்து கூறி வருகின்றனர். அவர்களது வெறிக்கூச்சலைத்தான் சீமான் வேறு மொழியில் எதிரொலிக்கிறார். தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணி விக்கச் சென்ற அவர், தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் சிறுபான்மையினர் என்று சொன்னால் அவர்களை செருப்பை கழற்றி அடிப்பேன் என்று மிரட்டியுள்ளார். இளையராஜா பெரும் பான்மை அவரது மகன் யுவன்சங்கர் ராஜா சிறுபான்மையா? மதம் மாறிய ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது சிறுபான்மையா? ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துவம் தானே பெரும்பான்மையாக உள்ளது. பிறகு ஏன் இத்தனை தனித்தனி நாடுகள்? மத அடிப்படை யில் பிரிந்த பாகிஸ்தானிலிருந்து ஏன் வங்க தேசம் பிரிந்து சென்றது என்றெல்லாம் கேட்டு சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறியுள்ளார். இன அடிப்படையில்தான் சிறுபான்மை பெரும்பான்மை என்று கூற வேண்டும். மத அடிப்படையில் கூறக்கூடாது என்று கூறி யிருக்கிறார். சிறுபான்மையினரை வரை யறுக்க இன, மொழி, மதம் என பல்வேறு வரை யறைகள் உண்டு.
உலக அளவில் டிசம்பர் 18ஆம் தேதி தேசிய சிறுபான்மையினர் தினமாக கடைப் பிடிக்கப்படுகிறது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம்தேதி ஐநா சபை மதரீதியான, மொழி ரீதி யான, இனரீதியான சிறுபான்மை சமூ கத்தைச் சேர்ந்த தனிநபர்களின் உரிமை குறித்த சாசனத்தை பிரகடனம் செய்தது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சிறுபான்மை யினரின் வாழ்நிலையை மேம்படுத்துவது அந்தந்த நாடுகளின் கடமை என்று ஐநா கூறுகிறது. இந்தியாவில் 1992 இல் தேசிய சிறுபான்மை யினர் ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது. இஸ்லாமி யர்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள், சீக்கி யர்கள், பார்சிகள், மதவழி சிறுபான்மையின ராக அறிவிக்கப்பட்டனர். 2014 ஜனவரி 27இல் ஜைனர்களும் இதில் இணைக்கப்பட்டனர். 2006ஆம் ஆண்டு சிறுபான்மையின ருக்கான தனி அமைச்சகம் உருவாக்கப் பட்டது. இஸ்லாமியர்களுடைய வாழ்நிலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட ராஜேந்திர சச்சார் குழு இந்தியாவில் இஸ்லாமிய மக்க ளின் எண்ணிக்கைக்கேற்ப அவர்களுக்கு பிரதிநிதித்துவம் எந்தவொரு துறையிலும் கிடைக்கவில்லை. சிறைச்சாலைகளில் மட்டுமே இஸ்லாமியர்கள் அவர்களது மக்கள் தொகை விகிதத்தை விட கூடுதலாக உள்ள னர் என வேதனை தெரிவித்தது. தேசிய குற்ற ஆவண புள்ளிவிபரங்களும் இதை உறுதி செய்கின்றன. இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தமிழ்நாடு உட்பட சில மாநிலங்க ளில் உள்ளது. ஒன்றிய அளவிலும் இதே போல இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் அறிவுறுத்தி யுள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு மதச் சிறு பான்மையினர் குறி வைத்து தாக்கப்படுகின்ற னர். இப்போது சிறுபான்மை மக்களுக்கு எதி ராக வெறுப்பு அரசியலை அன்றாடம் ஆர்எஸ்எஸ் பரிவாரம் விசிறி விடுகிறது. இப்போதும் கூட பாஜக - ஆர்எஸ்எஸ் பின் புலத்தில்தான் மணிப்பூரில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறை தூண்டிவிடப் பட்டு அந்த மாநிலம் பற்றி எரிகிறது. அரியானா விலும் கலவரத் தீயை சிறுபான்மை முஸ் லிம்களுக்கு எதிராக தூண்டிவிட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படு கின்றன. குடியுரிமை திருத்தச் சட்டம், மத மாற்றத் தடைச்சட்டம், பொது சிவில் சட்டம் என ஒன்றிய அரசின் பல்வேறு நடவடிக்கை கள் சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறையின் நீட்சியே ஆகும். சிறுபான்மை மக்களுக்கென்று அரசியல் சாசனம் வழங்கியுள்ள குறைந்தபட்ச உரிமை களையும் கூட பறிக்கத் துடிக்கிறது சங் பரி வாரம். சிறுபான்மை மாணவர்களுக்கு மவு லானா அபுல்கலாம் ஆசாத் பெயரில் வழங்கப் பட்ட கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டது.
பசுமாட்டு அரசியல், ஹிஜாப் பிரச்சனை என இஸ்லாமியர்களை குறி வைத்தே ஆர்எஸ்எஸ் பரிவாரம் அடுத்தடுத்து பிரச்ச னைகளை கிளப்புகிறது. பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து ஞானவாபி வழிபாட்டுத் தலப் பிரச்சனையை கிளப்பியுள்ளனர். இந்திய மக்கள் அனைவரையும் பாதிக்கக்கூடிய விலைவாசி, வேலையின்மை, வறுமை, பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், சாதிய ஒடுக்குமுறைகள் போன்றவற்றை மடைமாற்றவே ஆர்எஸ்எஸ் பரிவாரம் முயல்கிறது. அதன் மூலமாக தங்களது இந்துத்துவாவை நோக்கி நாட்டை நடத்திச் செல்ல முயல்கிறார்கள். எதிர்வரும் தேர்தலில் பாஜக முறியடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு எதிர்க்கட்சிகளிடையே ஒருங் கிணைப்பும் ஒத்துழைப்பும் அதிகரித்துள்ள நிலையில் சீமான் போன்றவர்கள் குட்டையை குழப்பி பாஜகவுக்கு பாத சேவகம் செய்கின்றனர். இத்தகைய ஒடுக்குமுறை குறித்து வாய்திறக்காத சீமான் மதத்தின் அடிப்படை யில் சிறுபான்மை பெரும்பான்மை எனப் பிரிக்கக்கூடாது என்று விஷம் கக்குகிறார். இதை வெறும் உளறலாக கடந்துவிட முடி யாது. ஆர்எஸ்எஸ் பாட்டுக்கு இவர் வேறு ராகத்தில் பின்பாட்டு பாடுகிறார். சீமானை நம்பும் அவரது ஒருசில தம்பி கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண் டும். இல்லையென்றால் அண்ணன் காட்டிய வழியம்மா, இது அதனால் விளைந்த பழியம்மா என்று புலம்ப வேண்டியிருக்கும்.