states

தீக்கதிர் விரைவு செய்திகள்

அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த திட்டம்: பரிந்துரை பட்டியல் அனுப்ப உத்தரவு

சென்னை,பிப்.6- புதிய ஆரம்பப் பள்ளிகள் தொடக் கம் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான பரிந்துரைகளை அனுப்புவதற்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து  மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு (தொடக்கக் கல்வி) அனுப்பியுள்ள சுற்றறிக்கை வருமாறு:- தமிழ்நாடு இலவச மற்றும் கட்டா யக் கல்வி உரிமை விதிகளின்படி தேவையின் அடிப்படையில் புதிய  தொடக்கப் பள்ளிகள் தொடங்கப் பட வேண்டிய குடியிருப்புகள் மற்றும்  நடுநிலைப் பள்ளிகளாகத் தரம்  உயர்த்த வேண்டிய பள்ளிகளை  கண்டறிந்து அதுசார்ந்த கருத்துரு களை புவியியல் வரைப்படத்துடன் அனுப்புமாறு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகத்தால் கோரப்பட்டுள்ளது. அதன்படி, புதிய தொடக்கப் பள்ளி மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டிய ஆரம்பப் பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதி சார்ந்த விவரங்களை புவியியல் தகவல் முறைமை வரைப்படத்துடன் துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும், அருகில் உள்ள பள்ளிகளின் விவரங்களையும் அதனுடன் இணைக்க வேண்டும். நடுநிலைப் பள்ளியாக தரம்  உயர்த்தப்பட வேண்டிய பள்ளிக்கு  அடிப்படை வசதிகளை உறுதிசெய்து  அறிக்கை சமர்பிக்க வேண்டும். போதிய மாணவர் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பதை அந் தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மின் இணைப்பு துண்டிப்பு தகவலை நம்பி ஏமாறாதீர்கள்

சென்னை,பிப்.6- மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- உங்களது முந்தைய மாத மின்கட்டணம் கட்டாவிட்டால் மின்  இணைப்பு இன்றிரவு துண்டிக்கப் படும் என்று பலருக்கு எஸ்.எம்.எஸ்.,  வாட்ஸ் அப் மூலம் தகவல் வருவ தாக புகார்கள் வருகின்றன. அதில்  நீங்கள் பணம் கட்டிய விவரங்களை  வாட்ஸ் அப்பில் தெரியப்படுத் துங்கள் என்றும் மோசடியாக சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தகவலை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். இது உண்மை யல்ல. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

ரூ.16 கோடியில்  புதிய கட்டிடம்

சென்னை,பிப்.6- சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.15.5 கோடி யில் அரசினர் பாதுகாப்பு இல்ல  புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.  இந்த கட்டிடத்துக்கு திங்களன்று (பிப்.6) முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சென்னை தலைமைச் செயல கத்திலிருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.  இதே போல் ரூ.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையக் கட்டிடங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்த  கட்டிடங்களை 1 வருட காலத்திற் குள் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.

குட்கா முறைகேடு: அவகாசம் கோரும் சிபிஐ

சென்னை,பிப்.6- தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2016  ஆம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதில் லஞ்சம் கொடுக்கப் பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர்.  இந்நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில்  தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி  உத்தரவிட்டது. இந்த வழக்கில் சிபிஐ காவல்துறையினர் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கைது செய்யப்பட்ட  மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம்பெற்றி ருந்தது. அமைச்சர் மற்றும் டிஜிபி என வேறு யாருடைய பெயர்களும் இடம்பெறவில்லை. இதனிடையே, முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு  கடந்த ஜூலை 19 அன்று அனுமதி வழங்கியது. இதனைத்  தொடர்ந்து 11 பேருக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் திங்களன்று (பிப்.6) சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு விசா ரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், பிழை திருத்திய  குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை. எனவே, கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை  விடுக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.