states

ரெப்கோ வங்கி நிர்வாக குழு தேர்தல்

சென்னை, மே 13- நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தபடி ரெப்கோ வங்கி நிர்வாக குழுவிற்கு தேர்தல் நடத்தா ததால் கூட்டுறவு சங்கங்களின் இணைச் செயலாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் நேரில் ஆஜ ராகி விளக்கம் அளிக்க சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. ரெப்கோ வங்கியின் நிர்வாக  குழுவிற்கு தேர்தல் நடத்த உத்தர விடக் கோரி தனபால் என்பவர் 2019இல் மனு தாக்கல் செய்திருந் தார். அதில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் 51 விழுக்காட்டிற்கு மேல் பங்கு மூலதனத்தை வைத்திருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்தின் நிர்வாக குழுவில்  முன்மொழியப்பட்ட உறுப்பினர்க ளாக 3 பேர் மட்டுமே இருக்க வேண்டும் எனவும், ஆனால் ரெப்கோ வங்கியில் அதிகாரிகளால் முன்மொழியப்பட்ட உறுப்பினர் களே அதிகளவில் உள்ளதாக தெரி வித்திருந்தார். எனவே ரெப்கோ வங்கி நிர்வாக குழுவிற்கு முறைப் படி தேர்தல் நடத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது இந்த விவகாரம் தொடர்பாக  ஆலோசிப்பதற்காக நிர்வாகக் குழுவை கூட்டுவதற்கு அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளதாக ரெப்கோ  வங்கி தரப்பில் தெரிவிக்கப் பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில், உயர்நீதி மன்றத்தில் தெரிவித்தப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என வும் 2021ஆம் ஆண்டு நீதிமன்ற  அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.  அதற்கு ரெப்கோ வங்கி அளித்த பதிலில், ரெப்கோ வங்கி சட்டத்தில்  விதிமுறைகளை திருத்தம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த நடவடிக்கை 6 முதல் 8 மாதங்களில் நிறைவ டையும் என்றும் தெரிவிக்கப் பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ப தால், முடிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி தனபால் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், உயர் நீதிமன்றத் தில் அளித்த உத்தரவாதத்தை வேண்டும் என்றே அவமதித்தது நிரூபணமாவதாகக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு ஏற்றுள்ளார். அதன்படி கூட்டுறவு சங்கங்க ளின் இணைச் செயலாளர் விவேக்  அகர்வால், ரெப்கோ வங்கி நிர்வாக  இயக்குநர் ஆர்.எஸ்.இசபெல்லா ஆகியோர் ஜூன் 17ஆம் தேதி நேரில்  ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.