states

வாரிசு இல்லாத ஆண் இறக்கும் பட்சத்தில் யாருக்கு வாரிசு சான்றிதழ்?

சென்னை, ஜூலை 29- வாரிசுகள் இல்லாத ஆண் இறக்கும் பட்சத்தில் யாருக்கு வாரிசு  சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது  குறித்து அரசாணையில் திருத்தம் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அம்பத்தூரை சேர்ந்த சங்கரனின் மகன் சந்தானம் கடந்த ஆண்டு பிப்ரவரியிலும், அவரது மனைவி அதற்கு  ஒரு மாதம் முன்பும் இறந்து விட்டனர்.  அவர்களுக்கு வாரிசு இல்லாத நிலை யில், தங்கள் பெயரில் வாரிசு சான்றி தழ் தரக்கோரி அவரது சகோதரர் ராஜேந்திரனும், இரண்டு சகோதரி களும் பெரம்பூர் வட்டாட்சியரிடம் கடந்த மே மாத இறுதியில் விண்ணப் பித்துள்ளனர். தங்களது விண்ணப்பம் பரிசீலிக் கப்படவில்லை என குற்றம்சாட்டி, உரிய  வாரிசு சான்றிதழ் வழங்கக் கோரி அவர்கள் தரப்பில் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தபோது, வட்டாட்சியர் தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் எம்.பிந்தி ரன் ஆஜராகி, கடந்த ஆண்டு வருவாய் துறை பிறப்பித்த அரசாணையில், மண மான ஆண் மரணிக்கும் பட்சத்தில் வாரிசு சான்றிதழ் எவ்வாறு வழங்க  வேண்டும் என்று மட்டுமே விதிமுறை கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களது பெற்றோர்  மற்றும் சகோதரர் சந்தானத்தின் மனைவி ஆகியோர் ஏற்கெனவே இறந்து விட்டதாகவும், சந்தானத் திற்கு வாரிசுகள் இல்லை என்றும் தெரிவித்தார். அதனால் நேரடி வாரிசு கள் இல்லாததால், அவரது வீடு மற்றும்  வங்கிக் கணக்கை கையாளுவதற்கு இரண்டாம் நிலை வாரிசுகளான தங்களுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கக் கோரி, விண்ணப்பித்ததாகவும் தெரிவித்தார். அதேசமயம் அரசு பிறப்பித்த அரசாணையில் மணமாகாத ஆண் இறக்கும் பட்சத்தில் வாரிசு சான்று வழங்குவது குறித்த நடைமுறை வகுக்கப்பட்டுள்ளதாகவும், மணமாகி மனைவி மற்றும் வாரிசுகள் இல்லாத ஆணின் வாரிசு சான்றிதழ் வழங்குவது குறித்து தெளிவுபடுத்தாததால், அந்த  அரசாணையில் குறைபாடு உள்ளதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட  நீதிபதி சேஷசாயி, இந்து வாரிசுரிமை சட்டத்திற்கு பொருந்தும் வகையில் அந்த அரசாணை இல்லை என்பதால்,  அந்த அரசாணையை திருத்துவதற் கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் மனுதாரர்  அளித்த விண்ணப்பத்தை 8 வாரங்களில்  பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் பெரம்பூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.