states

செங்கொடியால் மட்டுமே சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

புதுக்கோட்டை, ஜன.12-  தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக  செங்கொடி இயக்கத்தால் மட்டுமே மக்களி டையே சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த முடியும்  என தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி  மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீருக்கான மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவை கலந்த வர்களை உடனடியாக கைதுசெய்ய வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வியா ழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில், த.தீ.ஒ.முன்னணி பொதுச்  செயலாளர் கே.சாமுவேல்ராஜ் பேசியதாவது:  ‘‘இறையூர் பட்டியலின மக்களை மாவட்ட  ஆட்சியர் கோவிலுக்கு அழைத்துச் சென்று வழி பாடு நடத்தியதை வரவேற்கிறோம். தமிழ்நாட் டில் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்  பாட்டில் உள்ள பல கோவில்களில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமை இன்னமும் மறுக்  கப்பட்டு வருகிறது. அத்தகைய கோவில்களி லும் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமை யை நிலைநாட்டுவதற்கு தமிழக அரசும் இந்து  சமய அறநிலையத்துறையும் முன்வர வேண்டும். வேங்கைவயலில் குடிநீர் குழாயை மாற்று வதாலோ, குடிநீர்த் தொட்டியை இடிப்பதாலோ தீண்டாமையை ஒழித்துவிட முடியாது. மக்க ளின் மூளையில் உள்ள சிந்தனையை மாற்ற வேண்டும். செங்கொடி இயக்கத்தால் மட்டுமே மக்களின் மனதில் அத்தகைய சிந்தனை மாற்  றத்தை ஏற்படுத்த முடியும். டெல்டா மாவட்டங்க ளில் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் அத்த கைய மனமாற்றத்தை ஏற்படுத்திய வரலாறு செங்கொடி இயக்கத்திற்கு உண்டு.

அண்ணாமலை வாய் திறக்காததேன்?

‘இந்து’ மக்களுக்காகவே கட்சி நடத்துவ தாக சொல்கின்ற பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை, வேங்கைவயல் குறித்து வாய் திறக்காதது ஏன்? பாஜகவை பொறுத்தவரை வன்கொடுமை நடக்க வேண்டுமென்பதே அவர்  களின் விருப்பம். சாதி, மத வெறியை கிளறி அர சியல் ஆதாயம் தேட வேண்டும் என்பதே அவர்  களின் அரசியல் சித்தாந்தம். அதனால்தான் மதச்  சார்பின்மையை, மக்கள் ஒற்றுமை, பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்துகின்ற பகுதியை சட்டமன்றத்தில் ஆளுநர் திட்டமிட்டே பேச மறுத்தார்.  தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் பல வழி களிலும் வஞ்சிக்கப்படுகின்றனர். ஊரில் உள்ள  பொதுச் சொத்துக்களை அவர்கள் அனுபவிக்க அனுமதிப்பதில்லை. கோவில், குளம், மைதா னம், கலையரங்கம் போன்ற ‘பொது’ என்கிற எந்த உரிமையையும் அவர்கள் பயன்படுத்த அனுமதிப்பதில்லை.

உளவியல் சிக்கல்...

பட்டியலின மக்களுக்கு தனியாக குடிநீர்த்  தொட்டி இருக்கக்கூடாது. அனைத்துப் பகுதி யிலும் உள்ள குடிநீர்த் தொட்டி மூலமாகவே குடி நீர் விநியோகம் நடைபெற வேண்டும். தாழ்த் தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீதான வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட 32  குடியிருப்புகளுக்கும், ஒவ்வொரு தனி நப ருக்கும் குறிப்பாக வயிற்றில் கருவாக இருக்  கும் குழந்தைக்கும் சேர்த்து இழப்பீட்டை அரசு  வழங்க வேண்டும். இது உளவியல் ரீதியாக அந்த மக்களுக்கு செய்ய வேண்டிய நிவாரணம்.  ஓரிரு நாட்கள் மனிதக் கழிவு கலந்த குடிநீரை அந்த மக்கள் குடித்திருக்கிறார்கள். இந்த உள வியல் சிக்கலை அரசு புரிந்து கொண்டு ஒவ் வொரு தனிநபருக்கும் குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்தை வழங்க வேண்டும். காவல்துறை நினைத்து இருந்தால் மலம் கலந்தவர்களை அடுத்த நாளே கண்டுபிடித்து இருக்க முடியும்.

பல நாட்கள் இழுத்தடித்து பட்டி யலின மக்களை மிரட்டியோ, ஆசை வார்த்தை காட்டியோ இப்பிரச்சனையை திசைதிருப்பப் பார்க்கின்றனர். இது பொதுவாக காவல்துறை கையாள்கின்ற உத்தி என்பது எங்களுக்குத் தெரியும். காவல்துறை உண்மையான குற்ற வாளியை கைதுசெய்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் டி.செல்லக் கண்ணு, மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம், மாநில துணைச்செயலாளர் டி.சலோமி, விதொச மாநில பொருளாளர் எஸ்.சங்கர், சிஐடியு மாநி லச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், விச மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, வாலிபர் சங்க மாவட்டத்  தலைவர் எம்.மகாதீர், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுசீலா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சண் முகம், சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், த. அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.