சென்னை, அக்.7- தமிழ்நாட்டில் இணைய வழி விளையாட்டுகளை கட்டுப்படுத்துவதற்கான அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டு களைத் தடைசெய்யும் சட்டம் ஒன்றை 2020-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி அதிமுக அரசு இயற்றி யது. அதன்படி அந்த ஆட்டத்தை விளையாடு வோருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் 6 மாத சிறை தண்டனையும் வழங்கப்படும். அந்த விளையாட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை யும் விதிக்கப்படும் என அந்தச் சட்டம் கூறியது. இந்தச் சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இந்த நடவடிக்கையை எதிர்த்து ஆன்லைன் விளை யாட்டு நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப் பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை உயர் நீதி மன்றம் ரத்து செய்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் எந்த நீதிமன்றத்தாலும் தடை விதிக்க முடியாத வகையில் புதிய சட்டத்தை கொண்டு வருவதற்காக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைத்தது. இக்குழு பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டு, தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஜூன் 27 அன்று சமர்ப்பித்தது. பிறகு, மாணவர்களிடம் இணையதள விளையாட்டு கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி பள்ளிக்கல்வித் துறை நடத்திய கணக்கெடுப்பு, மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள், கருத்து பகிர்வோரிடம் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், சட்டத் துறை ஆலோசனையுடன் ஒரு வரைவு மசோதா தயாரிக்கப்பட்டது. அது, ஆகஸ்ட் 28 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு மேலும் செழுமைப்படு த்தப்பட்டது. இந்த மசோதாவுக்கு அமைச்சரவையும் ஒப்புதல் கொடுத்தது. பிறகு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுநர் தற்போது அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.