states

வடமாநிலங்களில் மழை காரணமாக வெங்காயம் விலை உயரும் அபாயம்

சென்னை, ஆக.19- தமிழகத்தில் உச்சத்தில் இருந்த  தக்காளி விலை கடந்த ஒரு வாரமாக  குறைந்து வருகிறது.  தற்போது சில்லரையில் ஒரு கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகிறது. முதல் தரமான தக்காளி கோயம் பேடு மொத்தவிலை காய்கறி சந்தை யில் கிலோ ரூ.42 ஆக உள்ளது. தக்காளி வரத்து அதிகரித்து வருவ தால் விலை படிப்படியாக குறைந்து  வருகிறது. தக்காளி மட்டுமின்றி பிற காய்கறி விலையும் குறைவாக உள்ளன.  மொத்த விற்பனையில் உரு ளைக்கிழங்கு கிலோவுக்கு ரூ.20, உஜாலா கத்தரிக்காய் ரூ.25, வரி  கத்தரிக்காய் ரூ.20, அவரை ரூ.40,  வெண்டைக்காய் ரூ.10, பாவக்காய்  ரூ.30, பீர்க்கன்காய் ரூ.20, புடலங் காய் ரூ.10, சுரக்காய் ரூ.5, பீன்ஸ் ரூ.40, பீட்ரூட் ரூ.20, முட்டைகோஸ் ரூ.16 என வீழ்ச்சி அடைந்துள்ளது. இஞ்சி விலை மட்டும் இன்னும் உயர்வாக உள்ளது. இஞ்சி மொத்த  விலையில் கிலோ ரூ.220, சில்லரை யில் கிலோ ரூ.280 வரை விற்கப்படு கிறது. புது இஞ்சி விலை கிலோ ரூ.80 ஆக உள்ளது. தற்போது பெரிய  வெங்காயம் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. முதல் தரமான வெங்காயம் கிலோ ரூ.32-ம், 2-வது தரம் கிலோ ரூ.20-க்கும் இன்று விற்கப்பட்டது. சில்லரை காய்கறி கடைகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ. 35 முதல் ரூ.40 வரை  விற்கப்படுகிறது. பெரிய வெங்கா யம் அதிகம் விளைச்சல் ஆகக்கூடிய  அரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா,  உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்க ளில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வரும் நாட்களில் பெரிய வெங்கா யம் மொத்த விற்பனை விலை கிலோ  ரூ. 60 முதல் ரூ.70 வரை உயர வாய்ப்பு உள்ளது. அங்கு மழை தொடர்ந்து பெய்தால் விலை மேலும் அதிகரிக்கும் என்று வியா பாரிகள் தெரிவித்தனர். கடந்த 2019-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை  காலத்தில் வெங்காய விளைச்சல் குறைந்ததால் கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்டது.