states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வெங்காயத்தின் விலை கிடு கிடுவென உயர்ந்து வருவதால் கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விடுவிக்க ஒன்றிய அரசு  முடிவு செய்துள்ளது. தலைநகர் தில்லியில் 15 நாட்க ளுக்கு முன்பு கிலோ 40 ரூபாயாக இருந்த வெங்கா யம் தற்போது 60 ரூபாயாக அதிகரித்துள்ளது சில்லறை விலையில் 65 முதல் 70 ரூபாய் வரை ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25  அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள  நிலையில், வாக்களிக்கும் நேரத்தை முதன்முறை யாக 11 மணிநேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதா வது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை  வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது.

கத்தார் நாட்டில் உளவு பார்த்ததாக 8 இந்தி யர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள நிலையில், அந்த 8 பேரை யும் விடுவிக்க நடவடிக்கைக்கோரி உறவினர்கள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள பாப்புலர்  பிரண்ட்  ஆப் இந்தியா உறுப்பினர் அன்வர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது தேசிய புல னாய்வு அமைப்பு.

அரசு நிகழ்ச்சியில் அரசியல் உரை நிகழ்த்தி யதாக பிரதமர் மோடி, மத்தியப்பிரதேச முதல்வர் சவுகான் மீது காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.

ஜம்மு -காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள மசூதி மீது தாக்குதல் நடத்தி கலவரத்தை  தூண்டும் செயல்களில் ஈடுபட்ட 2 இந்துத்துவா குண்டர்களை போலீசார் கைது செய்தனர். 

மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கைக்காக அக்., 24 முதல் காலவரையற்ற உண்ணாவிர தம் இருந்து வரும் ஆர்வலர் மனோஜ் ஜாரங்கே,  விரைவில் இடஒதுக்கீட்டை அரசாங்கம் உடனடி யாக வழங்கத் தவறினால், அக்டோபர் 29 முதல்  மகாராஷ்டிராவில் உள்ள ஒவ்வொரு கிராமத்தி லும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் போராட்டத்தின் போது உண்ணாவிரதம் இருக்கும் போராட்டக்காரர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அரசாங்கம் பொறுப் பேற்க வேண்டும் என்றும் ஜாரங்கே கூறினார்.

தலைநகர் தில்லியில் பெண்களுக்கு பாது காப்பு இல்லா சூழல் நிலவிவரும் நிலையில், ஜெய்த்பூர் பகுதியில் பூஜா யாதவ் (24) என்ற பெண்ணை காதல் விவகாரம் காரணமாக இளை ஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்தார்.