கடலூர், ஆக.1- விவசாயிகளை சந்திக்க விடாமல் காவல்துறை தடுப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ நாகை மாலி கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி கூறியதாவது: என்எல்சி நிறுவனத்தின் தவறான அணுகு முறையின் காரணமாக இந்த பகுதி முழு வதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. விவசாயி கள் மத்தியில் கவலை தொற்றிக் கொண்டுள் ளது. இதற்கெல்லாம் பிரதான காரணம் என்எல்சியின் செயல்பாடு. இது சம்பந்தமாக விவசாயிகளை நேரடி யாக சந்தித்து அவர்களின் கோரிக்கை, குறை களை கேட்டறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்றக்குழு தலைவரான நான், கந்தர்வ கோட்டை உறுப்பினர் எம்.சின்னதுரை,
மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு உள்ளிட்டோர் விவசாயிகள் சந்திப்பதற்காக வந்துள்ளோம். மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர் களையே விவசாயிகளை சந்திக்க விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மார்க்சிஸ்ட் கட்சி, விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர் நலனுக்கான கட்சி. விவ சாயிகளின் கருத்தை கேட்பது எங்களுடைய கடமை. அந்த வகையில் தான் விவசாயிகளை சந்திக்கச் செல்கின்றோம். காவல்துறை நட வடிக்கை சரியானது அல்ல என்பதை தெரி வித்துக் கொள்கிறோம். என்எல்சி பிரச்சனை நீண்ட காலமாக நிலவுகின்ற பிரச்சனை. பொதுத்துறை நிறுவனமாக என்எல்சி செயல்படுவது எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பது, ஒழிப்பது, விவ சாயிகளை நிர்க்கதியாக நிற்க வைக்கும் நிறு வனத்தின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக் கிறோம். என்எல்சி நிர்வாகம் ஏற்கனவே உறுதி அளித்ததை போல், இதுவரை நிலம் வழங்கிய எந்த குடும்பத்திற்கும் நிரந்தர வேலை கொடுக்க வில்லை. பட்டாவுடன் கூடிய நிலம், குடியிருப்பு வழங்கப்படவில்லை. கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் சிபிஎம் சார்பில் என்எல்சிக்கு நிலம் கொடுத்த விவ சாயிகள் கோரிக்கை குறித்து பேசினேன். முதலமைச்சர் தலையிட்டால் தான் நியாயமான தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்தேன்.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு என்எல்சி நிதி
முதல்வர் மு.க.ஸ்டாலின் என்எல்சி பிரச்சனையில் நேரடியாக தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நெய்வேலி நிறுவனம் சி.எஸ்.ஆர் நிதியை அந்த பகுதி மக்களின் நலனுக்காக செலவிட வேண்டும். ஆனால் வட மாநிலங்களுக்கு இந்த சிஎஸ்ஆர் நிதி செலவிடப்படுகிறது. பாஜக ஆளுகிற மாநிலங்களில் செலவு செய்கின்றனர். திடீரென்று வாய்க்கால் வெட்டுகிறோம்; தண்ணீரை வெளியேற்றுகிறோம் என்று சொல்கிறார்கள். இந்த மண் வள்ளலார் பிறந்த மண், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடி னேன் என்று பாடிய வள்ளலார் பிறந்த மண்ணில் இந்த காட்சியை காண்கின்றபோது தமிழ்நாட்டு மக்கள் மனம் வெந்து பார்க்கின்றார்கள். இன்னும் இரண்டு மாத காலம் ஏன் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. விவசாயத்தை அறு வடை செய்த பிறகு வாய்க்கால் வெட்டினால் என்ன?. மின் உற்பத்தி பாதிக்கப்படும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பயிரிட்ட விவசாயிகள் நெஞ்சம் பதற பதற எந்திரத்தை வைத்து பயிர்களை அழித்து வருகின்றனர்.
ஆக.8 - மறியல்
இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள னர், விவசாயத்தை நம்பியே உள்ள விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையை வைத்துக்கொண்டு எதையும் செய்துவிடலாம் என்று எண்ணி நிர்வாகம் செயல்படுவதற்கு கண்டனத்தை தெரிவிக் கிறோம். இப்பொழுதும் கூட இழப்பீடு தருவதாக சொல்கிறார்கள். என்ன இழப்பீடு, எவ்வளவு இழப்பீடு, எந்த அடிப்படையில் என்ற விவரம் சொல்லவில்லை. நேர்மையாக, நியாயமாக விவ சாயிகள் வாழ்வாதாரம் பாதிக்காமல் நிர்வாகம் நடந்து கொள்ள வேண்டும். இதற்கு மாநில அரசு விவசாயிகளுடன் சேர்ந்து நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும். என்.எல்.சி நிறுவனத்தின் இந்த அடாவடித் தனத்தை கண்டித்து விவசாயிகள் சங்கம், விவ சாய தொழிலாளர் சங்கம் சார்பில் வருகின்ற 8 ஆம் தேதி சேத்தியாதோப்பு கூட்டுரோடு, விருத்தா சலம், கடலூர் ஆகிய மூன்று மையங்களில் சாலை மறியல் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.