states

img

நவ.1 - தமிழ்நாடு அமைப்பு தினம் மாநிலம் முழுவதும் சிபிஎம் கொண்டாட்டம்

சென்னை, நவ. 1 - 1956 நவம்பர் 1 அன்று, மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு அமைந்தது. இதன் 67-ஆவது ஆண்டையொட்டி, மாநிலம் முழுவதும் தமிழ் வளர்ச்சி நாளாக கொண்டாடுவதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. மொழிவழி மாநிலங்கள் அமைவதற்கு கம்யூனிஸ்டுகள் ஆற்றிய அரிய பங்கு மற்றும் மாநில உரிமைகள் பறிப்புக்கு எதிராக நட த்திய போராட்டங்கள், பயிற்றுமொழி மற்றும் அலுவல் மொழியாக தாய்மொழியே விளங்க வேண்டும் என்பதற்காக மேற்கொண்ட முன்னெடுப்புகள் ஆகியவற்றை, தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும், இளம் தலைமுறையினரிடத்திலும் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த விழாக்களை நடத்துவதெனவும் அறிவித்தது. அதன்படி மொழிவழி அடிப்படையில் தமிழகம் அமைந்த நாளான  நவம்பர் 1 - புதனன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் விழாக்கள் நடைபெற்றன.

மயிலாடுதுறையில் சிறப்பு பேரவை

மயிலாடுதுறையில் மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் தலைமையில் சிறப்புப் பேரவை நடைபெற்றது. இதில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் சிறப்புரை யாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஸ்டாலின், எஸ். துரைராஜ், ப. மாரியப்பன், டி. சிம்சன், ஏ. ரவிச்சந்திரன், சி. விஜயகாந்த், ஜி. வெண்ணிலா, கே.பி. மார்க்ஸ், ஒன்றியச் செயலாளர்கள் டி.ஜி. ரவிச்சந்திரன், கே. அசோகன், கே. கேசவன், மயிலாடு துறை நகரச் செயலாளர் டி. துரைக் கண்ணு மற்றும் மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச்செயலாளர் கள், கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  கூட்டத்தில் மார்க்சிஸ்ட் இதழுக்கான 120 சந்தாத் தொகையை மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணனிடம் வழங்கினார்.  

விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு மரியாதை

விருதுநகர் கல்லூரி சாலையில் தியாகி சங்கரலிங்கனார் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது உரு வச் சிலைக்கு சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மாலை அணிவித்தார். முன்னதாக அல்லம்பட்டியில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர்  எல்.முருகன் தலைமை தாங்கி னார்.  கிளைச் செயலாளர் செல்வக் குமார், கே.பாலு ஆகியோர் முன்னி லை வகித்தனர். சாவித்திரி வர வேற்றார். மாவட்டச் செயலாளர் கே. அர்ஜூனன் துவக்கி வைத்துப் பேசி னார். மத்தியக்குழு உறுப்பினர்  உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பி னர்  எஸ்.நூர்முகமது ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. வேலுச்சாமி, எஸ்.லட்சுமி, முத்த தலை வர் எஸ்.பாலசுப்பிரமணியன்,  மாவட்ட க்குழு உறுப்பினர்கள் ஆர்.முத்துவேலு,எம்.ஜெயபாரத், நகர் குழு உறுப்பினர்கள்  வி.பாலமுருகன், எம்.செல்வம் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.