states

தமிழ்நாட்டில் 6.20 கோடி வாக்காளர்கள்

சென்னை,ஜன.5- தமிழ்நாட்டின் 2023 ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டி யலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சா`ஹூ வியாழனன்று (ஜன.5) வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- தமிழ்நாட்டில் ஜனவரி 1  தகுதி யேற்படுத்தும் நாளாகக் கொண்டு  புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 9.11.2022 அன்று வரைவுப்  பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கி யது. அப்போது வாக்காளர் பட்டியலில்  பெயர் சேர்த்தலுக்காக 10,54,566 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 10,17,141 விண்ணப்பங்கள் (ஆண்கள் 4,70,291 ; பெண்கள் 5,46,225 ;  மூன்றாம் பாலினத்தவர் 625) ஏற்கப் பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,20,41,179 வாக்காளர் கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 3,04,89,866; பெண்கள் 3,15,43,286 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,027வாக்காளர்கள் உள்ளனர். மீண்டும் முதலிடம் இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக மொத் தம் 6,66,295 வாக்காளர்கள் உள்ளனர்.  

இவர்களில் ஆண்கள் 3,34,081; பெண் கள் 3,32,096; மூன்றாம் பாலினத்தவர் 118.  அடுத்ததாக கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியில் மொத்தம் 4,57,408 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2,27,835; பெண்கள் 2,29,454; மூன்றாம் பாலினத்தவர் 119. குறைந்த வாக்காளர் குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இங்கு  மொத்த வாக்காளர்கள் 1,70,125 உள்ளனர். இதில் ஆண்கள் 88,396 பேர்,  பெண்கள் 81,670 பேர், மூன்றாம் பாலி னத்தவர் 59 பேர்.  இரண்டாவது இடத்தில்  நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,75,128 பேர். இதில், ஆண்கள் 85,652  பேர், பெண்கள் 89,474 பேர், மூன்றாம்  பாலினத்தவர் 2 பேர். இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் 3,310 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.