சென்னை, ஆக. 27- தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி களில் படிக்கும் மாணவ, மாணவி களுக்கு காலாண்டு விடுமுறை தொடர்பான அதிகாரப்பூர்வ அறி விப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு கள் நடைபெறும். அந்த வகையில் நடப்பு 2023-24ஆம் கல்வியாண்டில் 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு செப்ட ம்பர் 15ஆம் தேதி காலாண்டு தேர்வு கள் தொடங்குகின்றன. இதைய டுத்து 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவி களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி நடைபெறும். 6 முதல் 12ஆம் வகுப்பு வரை யிலான மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் 27ஆம் தேதியுடன் தேர்வு கள் முடிவடைகின்றன. உடனே காலாண்டு விடுமுறை தொடங்கி விடுகிறது. அதாவது, செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடு முறை. அதாவது 5 நாட்கள் மட்டுமே விடுமுறை என்பது கவனிக்கத்தக் கது. செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி நபி என்பதால் அரசு விடுமுறையாக அமைந்து விடுகிறது. 29ஆம் தேதி ஒரே ஒரு நாள் தான் தேர்வு விடுமுறை எனக் கூறும் வகை யில் அமைந்துள்ளது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமை. இதை யடுத்து செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆகியவை சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களாக வந்துவிடுகிறது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை. இதையடுத்து அக்டோ பர் 3 செவ்வாயன்று மீண்டும் பள்ளி கள் திறக்கப்படுகின்றன. குறைந்தது 10 நாட்களாவது காலாண்டு விடுமுறை கிடைக்கும் என மாணவ, மாணவிகள் மத்தி யில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அதில் பாதி மட்டுமே விடுமுறை யாக கிடைத்திருக்கிறது.