states

img

அக்.3 ஆவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை

நடப்பாண்டிற்கான தென்மேற்குப் பருவமழையானது கடந்த ஜூன் 1 அன்று கேரளத்தில் தொடங்கி, படிப்படியாக ஜூலை 8 அன்று  இதர மாநிலங் களுக்கும் முழு மையாக பரவி யது. வட மற்றும்  மேற்கு இந்திய மாநிலங்களில் பெரும் சேதத்தை விளைவித்த தென்மேற்குப் பருவமழை திங்களன்று விலக தொடங்கியுள்ளது. அக்டோபர் 15-க்குள்  ஒட்டுமொத்தமாக தென்மேற்கு பருவ மழை விடைபெறும் நிலையில், அடுத்த  2 நாட்களில் அதாவது அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. தென் மேற்கு பருவமழையின் இயல்  பான அளவு 832.4 மி.மீ. ஆகும். ஆனால்  நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை 780.3 மி.மீ. என குறைவான அளவிலேயே  பெய்துள்ளது. ஆனால் கடைசி நேரத்  தில் உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிர தேசம், உத்தர்கண்ட், குஜராத் ஆகிய  மாநிலங்களை தென்மேற்குப் பருவ மழை புரட்டியெடுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.