புதுதில்லி, மார்ச் 17 - அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகப்பெரிய போட்டியாளராகப் பிரதமர் மோடி இருப்பதாக நோபல் பரிசு கமிட்டியின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே கூறிய தாகத் தகவல் பரவியது. சொல்லப் போனால் பாஜக-வினரே இப்படி யொரு தகவலை நாட்டின் முன்னணி செய்தி ஊடகங்களுக்கும், சமூக வலைதளங்களிலும் பரப்பி விட்டனர். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளு மைகளுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த நோபல் பரிசுகளில், அமைதிக்கான நோபல் பரிசு பலரும் கவனிக்கும் அங்கீகாரமாக உள்ளது. கடைசி யாக, கடந்த 2014-இல் இந்தியா வைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலகளாவிய அளவில் அரசியல் தலைவர்களும் நோபல் பரிசை வென்றுள்ளனர். அண்மையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசை வென்றது இங்கு குறிப்பி டத்தக்கது.
இந்த வரிசையில்தான், இந்தா ண்டுக்கான நோபல் பரிசுக்கான போட்டியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதல் வரிசையில் இருப்பதாக பாஜக-வினர் கதை பரப்பினர். மேலும், இதனைத் தங்க ளுக்குக் கூறியதே நோபல் பரிசுக் கமிட்டியின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே-தான் என்றும் அள்ளி விட்டனர். அதாவது, “அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகப் பெரிய போட்டியாளராகப் பிரதமர் மோடி இருப்பதாகவும் அமைதியை நிலை நாட்டக்கூடிய நம்பிக்கைக்குரிய தலைவராக மோடி இருப்பார்” என்று டோஜே கூறியதாக செய்திகள் வெளி யாகின. போரிடும் நாடுகளுக்கு இடையே போரைத் தடுத்து அமைதியை நிலைநாட்டும் திறன் கொ ண்ட உலகின் நம்பகமான தலைவ ராக மோடி உள்ளார்” என்றும் டோஜே குறிப்பிட்டதாக அந்த செய்திகள் தெரிவித்தன.
இந்நிலையில்தான், “அமைதிக் கான நோபல் பரிசா..? இந்தியப் பிரத மருக்கா..? நான் எப்போது சொன் னேன்?” என்று அதிர்ச்சியை வெளிப் படுத்தியுள்ளார். தற்போது இந்தியா வுக்கு வந்திருக்கும் அஸ்லே டோஜே, “தான் கூறியதாக வெளி யான செய்திகள் முற்றிலும் பொய் யானவை” என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: ‘இது போருக்கான யுகம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா ஜனாதிபதியிடம் கூறியது நம்பிக்கை யின் வெளிப்பாடு. இன்று உலகப் பிரச்சனைகளை நாம் போர் மூலம் தீர்க்க முற்படக் கூடாது என்பதையே இந்தியா கூறியுள்ளது. பிரதமர் மோ டிக்கு மதிப்பு உள்ளது. உலகின் பெரும்பான்மையான மக்கள் இந்த விவகாரத்தில் அவருக்குப் பின்னால்தான் உள்ளனர். உக்ரை னில் நடக்கும் போர் என்பது உலக நாடுகளுக்கே ஒரு சோகம். இது முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டிய போர். அனைத்து நாடுக ளும் இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர முயல வேண்டும். அணு ஆயுதங்களின் பயன்பாட் டால் எந்தளவுக்குப் பேரழிவு ஏற்படும் என்பதை நினைவுபடுத்தும் வகையிலேயே இந்தியாவின் கருத்து இருக்கிறது. இந்த விவகா ரத்தில் இந்தியா உரத்த குரலில் பேச வில்லை, யாரையும் அச்சுறுத்த வில்லை. நட்பு ரீதியாகத் தனது கருத்தைத் தெரிவித்தது. உலகின் முதன்மையான சக்திகளில் இந்தி யாவும் ஒன்று என்பதால் சர்வதேச அரசியலில் நமக்கு இந்தியா அதிகம் தேவை. எனினும், நான் நார்வே நோபல் கமிட்டியின் துணைத் தலை வராக இந்தியாவுக்கு வரவில்லை. சர்வதேச அமைதி மற்றும் புரித லுக்கான இயக்குநராகவும், இந்தி யாவின் நண்பராகவும் இங்கு வந்து இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.