வாகன புகையினால் காற்று மாசு அதிகரித்து வருவ தாகவும், காற்று மாசு பாட்டை குறைக்கும் வகையில் டீசல் வாகனங்கள் மற்றும் டீசல் ஜெனரேட் டர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என ஒன்றிய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாகவும், இதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கடிதம் கொடுக்க உள்ள தாகவும் ஊடகங்களில் செய்தி வெளி யானது. இதற்கு ஆதாரமாக தில்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்க மாநாட்டில் நிதின் கட்காரி,”டீசல் வாகனங்களுக்கு குட்பை சொல்லுங்கள். தயவு செய்து அவற்றை தயாரிப்பதை நிறுத்துங்கள். இல்லையெனில் வரியை அதிகப்படுத்துவோம். அப்போது டீசல் கார் களை விற்பது கடினமாகிவிடும்” என கூறியிருந்தார். இத னால் டீசல் வாகனங்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஜிஎஸ்டி என்ற செய்தி உண்மையானது என நாடு முழுவதும் பரவிய நிலையில், இந்த செய்திக்கு அமைச்சர் நிதின் கட்காரி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் நிதின் கட்காரி,”டீசல் வாகனங்கள் விற்பனைக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பான எந்த முன்மொழிவும் தற்போது அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை. 2070-க்குள் கார்பன் உமிழ்வை பூஜ்யமாக்கும் இலக்கை எட்டுவதற்கும், டீசல் போன்ற அபாயகரமான எரி பொருட்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கும், தூய்மையான மற்றும் பசுமையான மாற்று எரிபொருளை ஏற்றுக்கொள்வது அவசியம்” எனக் கூறியுள்ளார்.