states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பீகாரில் ரெய்டு: நிதிஷ்குமார் கண்டனம்

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி வீட்டில் சிபிஐ நடத்தி வரும் சோதனை குறித்து செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பீகார் முதல்  வர் நிதிஷ்குமார், “கடந்த 2017ஆம் ஆண்டும் இதுதான் நடந்தது; அப்போதுதான் ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும்  தனித்தனியாக பிரிந்தன. ஐந்து ஆண்டுகளுக்  குப் பிறகு தற்போது நாங்கள் மீண்டும் ஒன்றி ணைந்திருக்கிறோம். மீண்டும் சோதனை நடைபெறுகிறது” என்று பதிலளித்துள்ளார்.

அம்புஜா சிமெண்ட் பங்குகளை விற்கும் அதானி?

அதானி குழுமத்தில் முதலீடு செய்தி ருக்கும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை  அதிகரிக்கவும், கடன் வழங்கியிருப்பவர் களின் கவலையைப் போக்கவும், முதிர்வு காலத்துக்கு முன்னதாகவே, அதானி குழுமம் தான் வாங்கிய கடன்களை அடைத்து வரு கிறது. இதற்காக, அம்புஜா சிமெண்ட் நிறுவ னத்தின் பங்குகளை விற்று ரூ. 3 ஆயிரத்து  700 கோடியை திரட்ட திட்டமிட்டிருப்பதாக வும், அந்த வகையில், அம்புஜா சிமெண்ட் நிறு வனத்தின் 4 முதல் 5 சதவிகித பங்குகளை விற்  பனை செய்வது தொடர்பாக சர்வதேச கடன்  வழங்குபவர்களிடம் அதானி கோரிக்கை வைத்திருப்பதாக தெரிகிறது.

அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார் கவிதா!

தில்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக, தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவின்  மகளும், சட்டமேலவை உறுப்பினருமான கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி யது. மார்ச் 9 அன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியிருந்தது. ஆனால், கவிதா தரப்பில் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்கவே, மார்ச் 11-ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை கூறியது. அதன்படி, தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவிதா ஆஜரானார்.

சொத்து வரி விதிப்புக்கு எதிராக காஷ்மீரில் முழு அடைப்பு!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஏற்கெனவே ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் குடியிருப்பு கள் இடிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதம் முதல் குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக் களுக்கு வரி விதிக்கப்படும் என ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தினர் சனிக்கிழமையன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் ஜம்முவில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினரும், நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனர்.

உச்சத்தை தொட்ட மின்சார பயன்பாடு

சென்னை,மார்ச் 11- தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 17,647  மெகாவாட் மின்சாரம் பயன்படுத் தப்பட்டுள்ளது. தற்போதைய மின் தேவை 16,500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. இது  வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17,000 மெகாவாட்டிலிருந்து 18,100 மெகாவாட் ஆக அதிகரிக் கலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் வெள்ளியன்று (மார்ச் 10) மின் நுகர்வு அதிகபட்சமாக 17,647 மெகாவாட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய உச்சபட்ச நுகர்வு 17,584” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

67 லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பு

சென்னை, மார்ச் 11- தமிழ்நாட்டில் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்து 67 லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 வகுப்பு,  கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறு பவர்கள் வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்க ளுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை  புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத் தில் 2 மாதங்கள் சலுகை வழங்கப்படு கிறது. இந்த நிலையில், தற்போது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளி யாகியுள்ளது. இது தொடர்பாக கடந்த  பிப்ரவரி 28 ஆம் தேதி நிலவரப்படி,  வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் பள்ளி, கல்லூரி முடித்தவர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள், காது கேளாதோர் என மொத்தம் 67 லட்சத்து 55 ஆயிரத்து 466 நபர்கள் பதிவு செய்து காத்திருப்பதாக வேலை  வாய்ப்பு மற்றும் பதிவுத்துறை அறிவித்துள்ளது.

காய்ச்சல் சிறப்பு முகாமில்  2 லட்சம் பேருக்கு பரிசோதனை

சென்னை,மார்ச் 11- நாடுமுழுவதும் எச்3 என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் தமிழ்நாடு முழுவதும் வெள்ளியன்று(மார்ச் 10)  ஒரே நாளில் 1000 இடங்களில் காய்ச்சல்  சிறப்பு மருத்துவ முகாம் நடத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்தார். அதன்படி சென்னையில் 200 இடங்கள் உள்பட தமிழ்நாடு முழுவ தும் 1000 இடங்களில் இந்த மருத்துவ முகாம்கள் நடந்தது. இதுகுறித்த விவரங்களை வெளியிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் கூறுகையில், “நடமாடும் மருத்துவ குழுக்கள் உள்பட 1558  முகாம்கள் நடத்தப்பட்டன. ஒன்றிய  அரசின் கீழ் இயங்கும் மருத்துவ குழுக் கள் 2 ஆயிரத்து 888 பள்ளிகளில் மாண வர்களுக்கு பரிசோதனை நடத்தப் பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 347 பயனாளிகள் பலன் அடைந்துள்ளனர். அவர் களில் 2 ஆயிரத்து 663 பேருக்கு காய்ச் சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. 9 ஆயிரத்து 840 பேருக்கு காய்ச்சலுடன் இருமல், சளி ஆகியவற்றுக்கும் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டன” என்றார்.

துருக்கி : கைகோர்க்கும் எதிர்க்கட்சிகள்

அங்காரா, மார்ச் 11- தற்போதைய ஜனாதிபதி ரெசெப் தய்யிப் எர்டோகனுக்கு எதிராகப் பொது வேட்பாளரை நிறுத்துவது என்று துருக்கி யின் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் முடி வெடுத்துள்ளன. அந்நாட்டின் ஆறு முக்கியமான கட்சி கள் முதல் கட்டமாக இணைந்து, தங்கள் கூட்டணி சார்பில் குடியரசு மக்கள் கட்சி யின் கேமல் கிளிக்டாரோகியுவின் பெயரை அறிவித்திருக்கிறார்கள். வரும் மே மாதம் 14 ஆம் தேதியன்று துருக்கியின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இஸ் தான்புல் மற்றும் அங்காரா நகரங்களின் மேயர்களான எக்ரம் இமாமோஜியு மற்றும் மன்சூர் யாவாஸ் ஆகிய இருவரும் துணை ஜனாதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளனர். லியி கட்சியின் தலைவரான மெரல் அக்செனர் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். கிளிக்டாரோகியுவின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். துணை ஜனாதிபதிகள் குறித்த அறிவிப்பு வந்தால் கூட்டணிக்கு திரும்புவதாகக் கூறி னார். அதனடிப்படையில் அறிவிப்பு வந்துள்ளது. அவரும் கூட்டணியில் திரும்பவும் சேர்வதாக அறிவித்துள்ளார். மே 14 ஆம் தேதி நடைபெறும் தேர்தல் கடுமையானதாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் வெற்றி பெற்றால் வெளி யுறவுத்துறை, பொருளாதாரம் மற்றும் மக்க ளின் உரிமைகள் குறித்து எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் மறு பரிசீலனைக்கு உள்ளாகும் என்றும், அதிரடியான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறப் படுகிறது.

இரண்டு மடங்காக அதிகரித்த அதானி குழும கடன்கள்!

புதுதில்லி, மார்ச் 11 - கடந்த நான்கு ஆண்டுகளில் அதானி குழுமத்தின் கடன்சுமை இரு மடங்காக உயர்ந்துள்ளது. அதானி குழுமம் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ள நிலையில், அதானி குழுமத்தின் கடன்கள் கடந்த நான்கு ஆண்டுக ளில் இருமடங்கு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தக் கடன் கள் டாலர் பத்திரங்களின் வடிவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதானி குழுமம் தனது முத லீட்டாளர்களிடம் அண்மையில் வெளியிட்ட விவரங்களின்படி, 2024-ஆம் ஆண்டில் அதானி குழுமம் திருப்பிச் செலுத்த வேண்டிய 200 கோடி டாலர் மதிப்பிலான கடன் பத்தி ரங்கள் இருக்கின்றன. மேலும், 4 ஆண்டுகளில் அதானி குழுமத்தின் கடன் இருமடங்கு உயர்ந்துள்ளது.  அதானி குழுமம் 2015 முதல் 2022 வரை 10 பில்லியன் டாலர் மதிப்பி லான கடன்களை டாலர் பத்திரங்கள் வாயிலாக பெற்றது. இதில் 1.15 பில்லியன் டாலர் கடன் பத்திரங்கள் 2022ஆம் ஆண்டுக்குள் முதிர்வ டைந்துவிட்டன. 2023-ஆம் ஆண்டில் முதிர்வடையும் பத்திரங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து 2024ஆம் ஆண்டில் சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான அதானி கடன் பத்தி ரங்கள் முதிர்வடைய இருக்கின் றன. இதில் அதானி போர்ட்ஸ் வாங்கிய 650 மில்லியன் டாலர் கடன், அதானி கிரீன் எனர்ஜி வாங்கிய 750 மில்லியன் டாலர் கடன் மற்றும் 500 மில்லியன் டாலர் கடன் என மொத்தம் 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்கள் 2024ஆம் ஆண்டில் முதிர்வடை கின்றன. ஆக, 2024-ஆம் ஆண்டில் அதானி குழுமத்துக்கு பெரும் கடன் சுமை ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. அதன் பின் 2025ஆம் ஆண்டில் முதிர்வடையும் டாலர் பத்திரங்கள் ஏதும் அதானிக்கு இல்லை. எனினும், 2026-ஆம் ஆண்டில் 1 பில்லியன் டாலர் மதிப் புள்ள கடன் பத்திரங்கள் முதிர்வ டைய இருக்கின்றன. இதையடுத்து சில கடன்களை அடைக்க அதானி முயற்சித்து வரு கிறது. மேலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற அதானி குழுமம் சிங்கப்பூரிலும், ஹாங் காங்கிலும் நிகழ்ச்சிகளை நடத்தி யுள்ளது. ஹிண்டன்பர்க் ரிசர்ச், கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக் கையிலேயே, அதானிக்கு நிறைய  கடன்கள் இருப்பதை தெரிவித்தி ருந்தது குறிப்பிடத்தக்கது.

“மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்”  அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை, மார்ச் 11- மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பள்ளிக் கல்வி துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறி வுறுத்தியுள்ளார். திருச்சி அருகே அரசு பள்ளியில் சக மாணவர்கள் தாக்கிய தில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம், அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்த தோளூர்பட்டியைச் சேர்ந்த மவுலீஸ்வரன் என்ற மாணவர் பள்ளி வளாகத்தில் மாணவர்களிடையே எதிர்பாராத விதமாக நடந்த சம்பவத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவருத்தமும், வேதனையும் அடைந்தேன். மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், முதல்வரின் அறிவுறுத்தலுக்கு இணங்க இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், இந்த, நிகழ்வின்போது பணியில் கவனக் குறைவாக இருந்த பள்ளியின் தலைமை யாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் பள்ளிகளில் நிகழாத வண்ணம், மாணவர்க ளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள் ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு அரசியல் சட்டத்தில் தெளிவு இல்லை

கி.வீரமணி குற்றச்சாட்டு

தஞ்சாவூர், மார்ச் 11- தமிழ்நாடு ஆளுநருக்கு அரசியல் சட்டத்தில் தெளிவு இல்லை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சாவூரில் சனிக்கிழமை முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா நினைவு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் எஸ். எஸ்.பழநிமாணிக்கம், எம்எல்ஏ டிகேஜி.நீலமேகம், மாநகராட்சி துணை மேயர் அஞ்சு கம் பூபதி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி.இறைவன், தஞ்சாவூர் பெரிய கோயில் சதய விழாக்குழுத் தலைவர் து.செல்வம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கிருஷ்ணசாமி வாண்டையார், பிஜி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியா ளர்களிடம் கூறுகையில்,  ‘‘தமிழ்நாடு ஆளுநர் அரசியல் சட்டத்தை சரியாக படித்துத் தான் ஆளுந ராக வந்தாரா என்பதே கேள்விக் குறியாக உள்ளது. இந்திய அரசியல் சட்டத்தில் மாநில அதிகாரத்தின் 34 -ஆவது பிரிவில் சூதாட்டம் தொடர்பான அதிகாரம் அனைத் தும் மாநில அரசுக்கு உள்ளது எனத் தெளி வாக குறிப்பிடப்பட்டுள்ளது.  ஏற்கெனவே அவசரச் சட்டத்தையும், சட்ட வரைவையும் தயாரித்தார்கள். இரண்டி லும் ஒரே சட்டப்பிரிவுகள் தான் உள்ளது. முதலில் ஆளுநர் அவசர சட்டத்துக்கு எப்படி ஒப்புதல் கொடுத்தார், அதே பிரிவுகளை கொண்ட தற்போதைய வரைவு சட்டத்துக்கு ஏன் அனுமதி கொடுக்கவில்லை. ஆளுநர் அரசாங்கத்தின் அங்கமாக கருதாமல், எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுகிறார். மீண்டும் இப்போது கூட்டப்படும் சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடைக்கான சட்டத்தை நிறை வேற்றினால், ஒப்புதல் அளிப்பதை தவிர வேறு வழியே இல்லை. எனவே, 200 ஆவது சட்டப்பிரிவின் கீழ் ஆளுநர் அனுமதி வழங்கியே தீர வேண்டும். ஆளுநர் அரசியல் சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தையும் பற்றி கவலையில்லாமல், ஆர்எஸ்எஸ் பற்றிதான் கவலைப்படுகிறார்’’ என்றார்.

மம்தா அரசை எதிர்த்த வேலை நிறுத்தம் வெற்றி: சிஐடியு வாழ்த்து

புதுதில்லி, மார்ச் 11- மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்களின் கூட்டு மேடை மார்ச் 10 அன்று நடத்திய வேலைநிறுத்தப் போரா ட்டம் மகத்தான முறையில் வெற்றி பெற்றதற்காக மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களை சிஐடியு பாராட்டி வாழ்த்தியிருக்கிறது. அகவிலைப்படியை நிலுவைகளுடன் வழங்கக் கோரியும், காலி யிடங்களை வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பக் கோரியும், முறைசாராத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்தக் கோரி யும், மாநிலத்தில் பிளவுவாத அரசியலை மேற்கொள் வதற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரியும், மாநி லத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கக் கோரியும் இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது.    மம்தா பானர்ஜியின் மேற்கு வங்க மாநில அரசு அது உருவான காலத்திலிருந்தே தன் சொந்த ஊழி யர்களின் எதிரியாகவே மாறியிருக்கிறது. உழைக் கும் மக்களின் ஒவ்வொரு பிரிவினர் மத்தியிலும் அது ஜனநாயக விரோத அரக்கத்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. 2023-24 பட்ஜெட்டின்போது வெறும் 3 விழுக்காடு அளவிற்குத்தான் அகவிலைப் படியை உயர்த்தியது. 32 விழுக்காடு அகவிலைப் படியை அளிக்காமல் ஏமாற்றிக்கொண்டிருந்தது. இதனால் மாநில அரசு ஊழியர்கள் மிகவும் கொதித்துப்போய் இருந்தார்கள்.   ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படியை உடனடியாக அளித்திட வேண்டும் என்று வலியுறுத்தி, மாநில அரசாங்கத்தின் தலைமைச் செயலகம் இயங்கிவரும் ரைட்டர்ஸ் பில்டிங் உட்பட அனைத்து மாநில அரசு அலுவலகங் கள் முன்பும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் அரசு ஊழியர்களும் திரண்டனர். மாநில அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக் கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சிஐடியு கோருவதுடன் அவர்களின் வேலைநிறுத்தத்திற்குத் தன்னுடைய முழுமையான ஆதரவினைத் தெரி வித்துள்ளது. போராடிக்கொண்டிருக்கும் மாநில அரசு ஊழியர்களுக்குத் தன் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துள்ளது.                       (ந.நி.)