states

தீக்கதிர் விரைவு செய்திகள்

சிகிச்சையிலுள்ள நிர்மலா சீதாராமன் இன்று வீடு திரும்புகிறார் 

ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு (63) திங்களன்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, பகல் 12 மணிக்கு தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்  பட்டு வருகிறது. தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும், சிகிச்சை முடிந்து, புதன்கிழமை யன்று அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டிச.30 முதல் 7-ஆவது வந்தே பாரத் ரயில் சேவை

மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து நியூ ஜல்பைகுரிக்கு இடையே, நாட்டின் 7-ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30-அன்று தொடங்கி வைக்கிறார். இதற்கான சோதனை திங்களன்று நடைபெற்றது. இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையில் 550 கிலோ மீட்டர் கொண்ட தூரத்தை 8 மணி நேரத்திற்கும் மேலான நேரத்தில் கடக்கும் தற்போதைய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை விட இந்த ரயில் வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘ராகுல் காந்தி ஒரு சூப்பர் ஹியூமன்’: சல்மான் குர்ஷித்

“ராகுல் காந்தி ஒரு சூப்பர் ஹியூமன். நாங்கள் குளிரில் உறைந்து ஜாக்கெட் அணிந்து கொண்டி ருக்கும் போது, அவர் டி-ஷர்ட் அணிந்துகொண்டு வெளியே செல்கிறார். அவர் ஒரு யோகி யைப் போல கவனம் செலுத்தி ‘தபஸ்யா’ (தியானம்) செய்கிறார்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பாராட்டியுள்ளார். தில்லியில் கடும் குளிர் நிலவிவரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வெறும் டி-சர்ட் மட்டும் அணிந்தபடி, அதிகாலையில் வாஜ்பாய் உள்ளிட்ட முன்னாள் பிரதமர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். இதனைக் குறிப்பிட்டே சல்மான் குர்ஷித் மேற்கண்டவாறு பாராட்டியுள்ளார்.

ராணுவத்தின் புதிய தலைமை பொறியாளர் அரவிந்த் வாலியா!

இந்திய ராணுவத்தின் புதிய தலைமை பொறியாளராக லெப்டினன்ட் ஜெனரல் அர்விந்த் வாலியா  நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமைப் பொறியாளர் ஹர்பல் சிங் டிசம்பர் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதை அடுத்து, அந்த இடத்திற்கு லெப்டினன்ட் ஜெனரல் அர்விந்த் வாலியா நியமிக்கப்பட்டுள்ளார். 1986-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த அர்விந்த் வாலியா, டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியின் முன்னாள் மாணவர் என்பதுடன், அகடாமியின் மதிப்பிற்குரிய விருதான வெள்ளிப் பதக்கத்தை பெற்றவர் ஆவார். பாலைவன படைப்பிரிவு கமாண்டர் மற்றும் காஷ்மீர் பொறியாளர் படைப்பிரிவு கமாண்டர் உள்ளிட்டப் பல்வேறு பொறுப்புகளையும் அரவிந்த் வாலியா இதற்கு முன்பு வகித்துள்ளார்.

பாஜகவில் பெண்களுக்கு இவ்வளவுதான் மரியாதையா?

“செப் 5-ஆம் தேதி நான் பாஜக-வில் இணைந்தேன். இணைந்து 10 நாட்களுக்கு பின் திருச்சி சூர்யா எனக்கு போன் செய்தார். அதன்பின் அண்ணாமலை அனுப்பியதாக என் அலுவலகத்திற்கே திருச்சி சூர்யா வந்தார். உருவகேலி செய்தார். ஆடை உடுத்துவது குறித்து தேவையில்லாமல் பேசினார். என் உடல் உறுப்பை பற்றி திருச்சி சூர்யா தவறாக பேசினார். அண்ணாமலையிடம் இதுகுறித்து புகார் அளித்தேன். இருப்பினும் திருச்சி சூர்யா தொடர்ந்து எனது தொலைப்பேசிக்கு அழைத்ததால் அவரது நம்பரை பிளாக் செய்தேன். பெண்கள் பாஜக-வில் நிர்வாகியாக இருக்கக்கூடாது என திருச்சி சூர்யா நினைக்கிறார். எனது அலுவலகத்திற்கு சூர்யா வந்து சென்றதற்கு சிசிடிவி கேமரா ஆதாரம் உள்ளது” என்று பாஜக இளைஞர்நலன் மாநிலச் செயலாளர் அலிஷா அப்துல்லா  கொந்தளித்துள்ளார்.

‘அண்ணாமலை உண்மை பேச வேண்டும்’

சென்னை, டிச.27- அண்ணாமலை சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளதால், அவர் தற்  போது பொய் சொல்ல முடியாது. எனவே, துபாய் ஹோட்டலில் என்னைப் பற்றி 150 பேர் முன்னிலையில் கேவல மாகப் பேசினீர்கள்.. அல்லது பகிரங்க மாக அந்த குற்றச்சாட்டை மறுக்க விரும்  புகிறீர்கள் என்ற உண்மையை ஏற்றுக்  கொள்ளுங்கள். அல்லது எனது இடை நீக்கம் சாதாரணமாக எடுக்கப்பட்டதா? என்பதற்கு பதில் சொல்லுங்கள். பெண்  களின் நேர்மையை இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனது குடும்பத்தினர் தினமும் கேள்வி களை எதிர்கொண்டு வேதனையில் ஆழ்ந்துள்ளனர். அதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்” என பாஜகவிலிருந்து சஸ்  பெண்ட் செய்யப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டரில் கூறியுள்ளார்.

ஆளுநருடன்  மு.அப்பாவு சந்திப்பு

சென்னை,டிச.27- ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கு வது வழக்கம். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி 9 ஆம் தேதி கூடுகிறது. இதனை பேரவைத் தலைவர் மு. அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஜனவரி 9 ஆம் தேதி காலை 10  மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப் பேரவையில் உரை நிகழ்த்துகிறார். அதில் அரசின் திட்டங்கள், செயல்பாடு கள், சாதனைகள், முக்கிய அறிவிப்பு கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள்  இடம் பெறும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேர வையில் உரையாற்ற இருப்பதை யொட்டி மரபுபடி அவரை பேரவைத் தலைவர் நேரில் சென்று அழைப்பு விடுக்க வேண்டும்.  அதன்படி, கிண்டி மாளிகைக்கு செவ்வாயன்று(டிச.28) சென்ற பேரவைத் தலைவர், ஆர்.என்.ரவியை சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்தார்.  இந்த சந்திப்பின் போது பேரவை செயலாளர் சீனிவாசன் உடனி ருந்தார்.

பொங்கல் பரிசு ரூ.1000: அறிவிப்பு விரைவில் வரும்

சென்னை,டிச.27- சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தலைமையில் அனைத்து மண்டல இணை பதிவாளர் கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு  வங்கி மேலாண்மை இயக்குநர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.   இந்த கூட்டத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதா கிருஷ்ணன், பதிவாளர் சண்முக சுந்தரம், கூடுதல் பதிவாளர் சங்கர் உள் ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர் “ பொதுமக்களுக்கு சென்ற ஆண்டு 21  பொருட்களுடன் கரும்பையும் முதல மைச்சர் வழங்கினார். அதில் கரும்பு உள்ளிட்ட சில பொருட்களின் குறைபாடுகளை பலர் சுட்டிக்காட்டி னார்கள். பல கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பை கொடுக்கும் போது ஒரு சில இடங்களில் எங்காவது தவறு  நடந்திருந்தால் அதை மிகைப்படுத்து கிறார்கள் என்பதால் இதுபோன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த முடிவு எடுத்திருக்கலாம்” என்றார். பொங்கல் பணம் ரூ.1000 வழங்கு வதற்கு டோக்கன் கொடுப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. அது தொடர்பாக ஆலோசனை நடத்தி  முறையான அறிவிப்பு வெளியிடுவோம் என்றும் அவர் கூறினார்.

முட்டுக்காடு ஏரியில்  வரித்தலை வாத்துகள்

சென்னை,டிச.27- மங்கோலியாவில் அதிக அளவில் வரித்தலை வாத்துக்கள் காணப்படும். தற்போது அங்கு குளிர் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் இந்தப் பறவை கள் இந்தியாவின் பல்வேறு பகுதிக ளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. ஆண்டு தோறும் அக்டோபர் மாதம்  முதல் வலசை பறவைகள் திரு வள்ளூர் மாவட்டம், பழவேற்காடு முதல்  திருநெல்வேலி மாவட்டம், கூந்தன் குளம் வரை பல்வேறு நீர் நிலைகளில் தங்கிச் செல்வது வழக்கம். இந்த  நிலையில் தமிழகத்துக்குவரத் தொடங்கி உள்ளன. முதன்முறையாக சென்னை அருகே முட்டுக்காடு ஏரியில் இருப்பது பறவைகள் கணக் கெடுப்பில் தெரியவந்துள்ளது.

சொத்து வரியை  உயர்த்தியது செல்லும்: உயர்நீதிமன்றம்

சென்னை, டிச.27- எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடை பெற்ற நிலையில், இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாஜக உடன் சேர்ந்தால் நமக்குத்தான் இழப்பு என்று மாவட்டச் செயலாளர்கள் கூறியதாக தெரிகிறது.  ஆனால், “100 சதவிகிதம் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என பாஜக எப்போதும் வற்புறுத்தி யது இல்லை. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக  தலையிடுவதில்லை. எனவே பாஜக குறித்து யாரும் அவ தூறாக பேச வேண்டாம்” என்று எடப்பாடி பழனிச்சாமி கெஞ்சிக் கூத்தாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சொத்து வரியை  உயர்த்தியது செல்லும்: உயர்நீதிமன்றம்

சென்னை,டிச.27- சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரி உயர்த்தியது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.  சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சி யாக மே 30 அன்று சென்னை மாநகராட்சி, சொத்து வரியை  உயர்த்துவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்த அரசாணையையும், மாநகராட்சி தீர்மானத்தையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார்.

அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, “மக்கள் நலத்திட்டங்களுக்கு தேவை யான நிதியையும், அரசின் செலவினங்களுக்காகவும் வருவாயை திரட்டுவதும், வரி விதிப்பால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை சமன்படுத்துவதும் ஒரு மக்கள் நல  அரசுக்கு அவசியமாகிறது என்பதால் வரி விதிப்பை வெளிப் படைத் தன்மையுடனும், கேள்விகளுக்கு அப்பாற்பட்டும் மேற்கொள்ள வேண்டும். பொருளாதார நலனுக்காக நிதிக்குழு அளித்த பரிந்துரைப் படி சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்ததில் எந்த  தவறும் இல்லை. சொத்து வரியை உயர்த்துவது குறித்த  அரசாணை என்பது ஆலோசனையாக உள்ளதே தவிர,  உத்தரவாக இல்லை. இந்த அரசாணையின் அடிப்படையில், கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து  வரி இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி அரசாணையும், மாநகராட்சி தீர்மானங்க ளும் செல்லும். அதேசமயம், சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை சொத்துவரி செலுத்தும் 15 லட்சம் பேரில்,  30 பேர் தெரிவித்த ஆட்சேபங்களை முறையாக பரிசீலித்து  பதிலளித்திருந்தால் இந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்திற்கு வந்திருக்காது. அதேபோல வரி உயர்வுக்கு பொதுமக்கள் ஆட்சேபங் கள் தெரிவிக்கும் விதமாக முறையாக அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. மேலும், சொத்து வரியை நிர்ணயிக்க பின்பற்றப்படும் நடைமுறையை குறை கூற முடியாது. 2023-24 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு முதல், அதாவது வரும் ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை  அமல்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

உலகிற்கு மாடலை உருவாக்கிய வியட்நாம்

மவுரோ அல்போரெசி பாராட்டு

ரோம், டிச.27- சோசலிச வியட்நாமின் முன்னேற்றம் மற்றும் அதன் பெரும் சாதனைகள் உல கிற்கே வழிகாட்டுபவையாகும் என்று இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் செய லாளர் மவுரோ அல்போரெசி பாராட்டியுள் ளார். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வியட்நாம் குறிப்பிடத்தக்க அளவில் முன் னேற்றம் கண்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்ட பிறகு,  பல்வேறு நாடுகளுடன் ஏராளமான ஒப்பந்தங் களில் வியட்நாம் கையெழுத்திட்டுள்ளது. இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளு டன் இரு தரப்பு வர்த்தகம் குறித்த உடன்பா டுகள் அண்மையில் கையெழுத்தாகியிருக் கின்றன. வியட்நாமுடன் இரு தரப்பு உறவு களை வைத்துக் கொள்ள பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், வியட்நாமின் சமூக மற்றும் பொருளாதார சாதனைகள் பற்றி இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சியின் செய லாளர் மவுரோ அல்போரெசி பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி வியட்நாமின் இத்தாலிக்கான தூதுவரிடம் பேசிய அவர்,  “உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டு மற்றும் உழைப்பாளிகளின் கட்சிகள்  பின்பற்ற வேண்டிய ஒரு மாதிரியை  வியட் நாம் கம்யூனிஸ்டு கட்சி உருவாக்கியுள்ளது. 35 ஆண்டுகால வியட்நாம் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில்தான் இது சாத்தியமாகியிருக்கிறது” என்றார்.  வியட்நாம் கம்யூனிஸ்டு கட்சிக்கும், இத்தாலி கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையி லான நட்புறவை வருங்காலத்தில் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று கூறிய அல்போரெசி, “கோட்பாடு ரீதியான ஒத்து ழைப்பையும் இரு கட்சிகள் பேண வேண்டும்” என்று வலியுறுத்தினார். பல் வேறு முக்கியமான தருணங்களில் இத்தாலி மக்கள் வியட்நாமுக்கு ஆதரவாக நின்றி ருந்ததற்கு, வியட்நாம் தூதர், அல்போரெசி யிடம் நன்றி தெரிவித்தார்.