states

img

குஜராத்திற்கு மட்டும் கேட்காமலேயே ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவது எப்படி?

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசை விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு, “பாஜக-வினர் எந்தக் காலத்திலும் உண்மையைப் பேசுபவர்கள் கிடையாது” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பதிலடி கொடுத்துள்ளார். அதில், மேலும் கூறியிருப்பதாவது:

நிர்மலா சீதாராமன் சார்ந்து இருக்கக்கூடிய கட்சி எந்த காலத்திலும் உண்மையை பேசியது கிடையாது. எனவே, தற்போது அவர் பேசியிருப்பது பல பொய்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. முன்கூட்டியே போதுமான எச்சரிக்கை வழங்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், எச்சரிக்கை வழங்கப்பட்டு விட்டது என்று ஒன்றிய அமைச்சர் கூறு கிறார். எச்சரிக்கையை நாங்கள் மறைப்ப தாக இருந்தாலும் ஊடகங்கள் வெளி யிட்டிருக்கும். ஆனால், அப்படி ஏதும் வெளியிடப்படவில்லை. எனவே, இது  பச்சைப் பொய். தமிழ்நாட்டை சேர்ந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டுக்கு கூடுதலாக நிதியளிக்க முன் வந்திருக்க வேண்டும். அப்படி செய்யாதது வருத்தம் அளிக்கிறது. அது மட்டுமல்லாது அவர் இவ்வாறு பேசுவது வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதை போல இருக்கிறது. அரசியல்  பேசுவதற்கு இது நேரமில்லை.  தமிழ்நாட்டு மக்கள் தத்தளிக்கிறார்கள். குஜராத்திற்கு ஓடோடிச் சென்று கேட்கா மலேயே நிதி உதவி செய்யக்கூடிய ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு கேட்ட  பின்னரும் போதுமான நிதி வழங்காத தற்கான காரணம் என்ன? தமிழ்நாடு இந்தியாவினுடைய மேப்பில்தானே இருக்கிறது? ஒருவேளை தமிழ்நாடு என்பதே இருக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் செயல்படுகிறார்களா? என்பது தெரியவில்லை. இந்த நான்கா யிரம் கோடி என்ன ஆனது என்பதை  மனச்சாட்சி உள்ளவர்கள் அறிவார்கள்.  இந்தத் தொகை செலவிடாமல் இருந்திருந்தால் இன்று சென்னை காப்பாற்றப்பட்டிருக்காது. இதுதொடர் பாக வெளிப்படையான அறிக்கை கொடுப்பதற்கு கூட அரசு தயாராக இருக்கிறது.” இவ்வாறு ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.