நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காலநிலை மாற் றத்தால் காற்றுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்து வந்த நிலையில், ரோஜா செடிகளில் இருந்து மலர்கள் உதிர்ந்தன. இதனால் முதல் சீசனின் மலர்கள் மிகவும் தாமதமாக பூத்துள்ள நிலையில், மலர்கள் இன்றி ஊட்டி பகுதி சுற்றுலா தளங்கள் வெறிசோடி காணப்படுகின்றன. ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த “ஜவான்” திரைப்படம் வெளியான 3 நாட்க ளில் ரூ.384.69 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டம் குர்ஜா பகுதியில் வசிக்கும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலை வர் ஹாஜி முகமது உமர் (70) என்பவர் 2 நாட்க ளுக்கு முன் காளிந்தி குஞ்ச் காலனியில் வசிக்கும் ஒருவரைச் சந்திப்பதற்காக இருசக்கர வாக னத்தில் சென்றார்.அதன்பிறகு அவரை காண வில்லை என குடும்பத்தினர் கூறிய நிலையில், ஞாயிறன்று சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப் பட்டார் ஹாஜி முகமது உமர்.
புதையல் எடுத்து தருவதாகக் கூறி விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மந்திரவாதி சத்யபிர காஷ் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றும் பிரபாத் துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை யொட்டி சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் சென்னை திரும்புவதால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 1030 திருக்கோயில்களின் குடமுழுக்கு நடத்தப் பட்டது குறித்து, புகைப்படங்கள் அடங்கிய புத்தகம் விரைவில் வெளியிடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் - சோனியா தம்பதியினரின் நான்கு வயது மகன் ரக்சன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த நிலை யில், டெங்கு பரவலை முற்றிலும் தடுக்க உடனடி யாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.